பெற்றோரின் சடலத்துடன் 2 நாட்கள் தனியாக இருந்த 1 வயது குழந்தை
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் ஒரு வயது ஆண் குழந்தை ஒன்று தூக்கில் பிணமாகத் தொங்கிய தனது பெற்றோருக்கு அருகே அமர்ந்து அழுது கொண்டே இரண்டு நாட்களை கழித்துள்ளது.
பெங்களூரைச் சேர்ந்தவர் மஞ்சுநாதா. அவரின் மனைவி மீனாக்ஷி. அவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. மஞ்சுநாதா தனது மனைவி, குழந்தையுடன் ஹைதராபாத் ஜூடிமெட்லா பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

கடந்த 5 மாதங்களாக அவர்கள் அந்த வீட்டில் வசித்து வந்துள்ளனர். மஞ்சுநாதா குகட்பள்ளியில் உள்ள ஆதீஷ்வர் எலக்ட்ரானிக்ஸில் விற்பனை பிரிவிலும், மீனாக்ஷி அதே பகுதியில் உள்ள ஹைபர் மார்ட்டிலும் பணியாற்றி வந்துள்ளனர்.
அவர்களுக்கு பண பிரச்சனை இருந்துள்ளது. இதனாலேயே அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இருவரும் குழந்தையை தவிக்கவிட்டுவிட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். தற்கொலை செய்யும் முன்பு கன்னடத்தில் கடிதம் ஒன்றை எழுதி வைத்தனர்.
வியாழக்கிழமை குழந்தை அழது கொண்டே இருக்கும் சப்தம் கேட்ட தரை தளத்தில் வசிக்கும் வீட்டின் உரிமையாளருக்கு சந்தேகம் ஏற்படவில்லை. வெள்ளிக்கிழமையும் குழந்தையின் அழுகுரல் தொடர்ந்து கேட்கவே அவருக்கு சந்தேகம் ஏற்பட்டு மாடி வீட்டுக்கு சென்றார். அங்கு மஞ்சுநாதாவும், அவரது மனைவியும் தூக்கில் பிணமாகத் தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனே இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
போலீசார் வந்து உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையை குகட்பள்ளியில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்தனர். இந்த சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications