கிரண்குமார் ரெட்டிக்கு செருப்பு!
ஹைதராபாத்: ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் கிரண்குமார் ரெட்டி, தனது புதிய கட்சியின் சின்னத்தை அறிமுகப்படுத்தினார்.
தெலங்கானா தனி மாநிலம் உருவாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி பதவியை ராஜினாமா செய்து தனிக் கட்சி தொடங்கினார். தனது கட்சிக்கு ''ஜெய் சமக்யாந்திரா கட்சி" என பெயரிட்டுள்ளார். தனது கட்சிக்கு 'செருப்பு' சின்னத்தை தேர்ந்து எடுத்தார். இதற்கு தேர்தல் ஆணையமும் ஒப்புதல் அளித்துள்ளது.
இதையடுத்த விசாகப்பட்டினத்தில் நடந்த நிகழ்ச்சியில், தனது கட்சி சின்னத்தை கிரண்குமார் ரெட்டி அறிமுகப்படுத்தி பிரசாரத்தை தொடங்கி பேசும்போது கூறியதாவது:

ஏன் செருப்பு சின்னம்
''மக்கள் அனைவரும் செருப்பு அணிகிறார்கள். அதனால் இந்த சின்னம் எளிதில் அவர்களிடம் பிரபலமடையும். செருப்பு, அதனை அணிபவர்களின் சுமையை தாங்குவது மட்டுமின்றி அவர்களுக்கு பாதுகாப்பும் அளிக்கிறது.

சமத்துவத்தின் சின்னம்
சாதி, மதம் போன்ற எந்த பாகு பாட்டையும் காட்டுவதில்லை. சமத்துவத்தின் சின்னமாக செருப்பு இருக்கிறது.

ராமராஜ்யத்திற்கு
ராமராஜ்யம் ஏற்பட ராமரின் செருப்பு வழி காட்டியது. அதுபோல, இந்த செருப்பும் நல்ல ஆட்சிக்கு, மக்கள் ஒற்றுமைக்கு வழி காட்டும்.

ஒருங்கிணைந்த ஆந்திரா
மாநில பிரிவினைக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் உதவியவர்களுக்கு ஒரு இடம் கூட கிடைக்காதபடி நீங்கள் பணியாற்ற வேண்டும். ''ஜெய் சமக் யாந்திரா" என்பது வெறும் கோஷம் அல்ல. அது லட்சியம் என்றார் கிரண்குமார்.

இளைஞர்களின் கட்சி
இது இளைஞர்கள் கட்சியாக இருக்கும். மக்களாகிய நீங்கள் சொல்லும் வேட்பாளரை தேர்தலில் நிறுத்துவேன். இதற்காக உங்களிடம் கருத்து கேட்டேன். உங்கள் கருத்துப்படி வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள்" என்று அவர் பேசினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications