கொச்சியில் உலகின் முதல் சூரியசக்தி விமான நிலையம்... முதலமைச்சர் உம்மன் சாண்டி திறந்து வைத்தார்
கொச்சி : உலகிலேயே சூரிய சக்தியில் செயல்படும் முதல் விமான நிலையம் என்ற பெருமையை கேரள மாநிலம் கொச்சியில் உள்ள சர்வதேச விமான நிலையம் பெற்றுள்ளது. இதனை முதலமைச்சர் உம்மன்சாண்டி திறந்து வைத்தார்.
கொச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு ஒரு நாளைக்கு 50,000 முதல் 60,000 ஆயிரம் யூனிட்டுகள் வரை மின்சாரம் தேவைப்படுகிறது.

இந்த மின்சாரத்தை சூரிய சக்தி மூலம் உற்பத்தி செய்ய முடிவு செய்த கொச்சி விமான நிலைய நிறுவனம் முதற்கட்டமாக கடந்த மார்ச் 2013-ல் 100 கிலோவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட சோலார் பிளான்டை விமான நிலையத்தின் வருகை முனைய கட்டிடத்தின் கூரையில் அமைத்தது. கிரிட் முறையில் வடிவமைக்கப்பட்ட இதில் பேட்டரிக்கு பதிலாக ஸ்டிரிங் இன்வெர்டர்கள் பயன்படுத்தப்பட்டன.
இது வெற்றிகரமாக அமைந்ததை அடுத்து, விமான நிலைய வளாகத்திலும், கூரையிலும் மீண்டும் 1 மெகாவாட் சோலார் பிளான்டை அமைத்தது. பாதி சோலார் பேனல்கள் விமான நிலைய கூரைகளிலும், பாதி தரையிலும் அமைக்கப்பட்டன.
ரிமோட் கன்ட்ரோல் மூலம் கட்டுப்படுத்தும் வகையில் இந்த சோலார் பிளான்ட் அமைக்கப்பட்டது. சோலார் மூலம் விமான நிலையம் இயக்கப்பட்ட பிறகு, இதுவரை 550 மெட்ரிக் டன் அளவுக்கு கார்பன் குறைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது விமான நிலையம் முற்றிலுமாக சோலார் மயமாக்கப்பட்டுள்ளது. கார்கோ காம்ப்ளக்ஸ் அருகே சுமார் 45 ஏக்கர்கள் நிலப்பரப்பில் 46,150 சோலார் பேனல்களுடன் கூடிய 12 மெகாவாட் சோலார் பவர் பிளான்டை இன்று (செவ்வாய்) காலை கேரள முதல்வர் உம்மன்சாண்டி தொடங்கி வைத்தார்.
இதன்மூலம் விமான நிலையத்திற்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்று, விமான நிலைய நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. முழுவதும் சூரிய மின்சக்தியில் இயங்கும் உலகின் முதல் விமான நிலையம் என்ற பெருமையையும் கொச்சி விமான நிலையம் பெற்றுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications