கொல்கத்தாவை புரட்டி போட்ட புயல்.. 10 பேர் பலி, பலர் காயம்!
நேற்று காலையில் இருந்து கொல்கத்தாவில் வீசி வரும் மோசமான புயல் காரணமாக இதுவரை அங்கு 10 பேர் பலியாகியுள்ளனர்.
Recommended Video
கொல்கத்தா: நேற்று காலையில் இருந்து கொல்கத்தாவில் வீசி வரும் மோசமான புயல் காரணமாக இதுவரை அங்கு 10 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயம் அடைந்து இருக்கிறார்கள்.
மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் நேற்று இரவில் பெரிய அளவில் புயல் வீசியது. ஒரு மணி நேரம் தொடர்ச்சியாக இந்த புயல் வீசி வந்தது. அதன் பின், மிகவும் வேகமான காற்று வீசி வந்தது. இந்த திடீர் பருவநிலை மாற்றம் மக்களை கஷ்டப்பட வைத்தது.
முதலில் 80 கிமீ வேகத்தில் தொடங்கிய புயல் போக போக அதிக வேகமெடுத்தது. இதனால் கடைசி நேரத்தில் 105 கிமீ வேகத்தில் புயல் வீசியது. இது மரங்கள், சிறிய வீடுகளை அடியோடு பெயர்த்து எடுத்தது.
இதனால் சாலை போக்குவரத்து, ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின் அடியோடு இரண்டு போக்குவரத்தும் நாள் முழுக்க நிறுத்தப்பட்டது. பின் 2 மணி நேரம் விமானம் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.
Terrible #storm with strong winds in #Kolkata yesterday,a casualty of nine people, a sight of a popular club in #Kolkata last evening . pic.twitter.com/yWcBavegZF
— Saira Shah Halim (@sairashahhalim) April 18, 2018
இந்த புயல் காரணமாக மொத்தம் 10 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். 20க்கும் அதிகமான நபர்கள் காயமடைந்து இருக்கிறார்கள். பலர் திடீர் நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அங்கு காலநிலை இயல்புநிலைக்கு திரும்பி உள்ளது. ஆனாலும் பல இடங்களில் மின்வெட்டு நிலவிவருகிறது.