கேரள வெள்ளத்தில் சிக்கிய கர்நாடக அரசு சொகுசு பஸ்.. வைரலாகும் போட்டோ
மைசூர்: வயநாடு பகுதியில் கர்நாடக அரசு பஸ் வெள்ளத்தில் சிக்கிய காட்சி வைரலாகியுள்ளது.
கர்நாடக அரசு பஸ் இயக்கும் அதி நவீன சொகுசு பேருந்தான, கேஎஸ்ஆர்டிசி பென்ஸ் மல்டி ஆக்சில், கேரளாவின் கோழிக்கோடு நகரில் இருந்து பெங்களூருக்கு, செவ்வாய்க்கிழமை இரவு கிளம்பியது. பஸ் வயநாடு மாவட்டம், சுல்தான் பத்தேரி பகுதிக்கு வந்தபோது வெள்ளத்தில் சிக்கிக்கொண்டது.

இதனால் பயணிகள் பாதுகாப்பாக கீழே இறக்கப்பட்டனர். இந்த போட்டோ இப்போது வைரலாக சுற்றி வருகிறது.
பயணிகள் வேறு பஸ் மூலம் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தையடுத்து, பெங்களூர் முதல் மங்களூர் வரை இயங்கும் கேஎஸ்ஆர்டிசி ப்ரீமியம் பஸ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. குக்கே சுப்ரமணியா, தர்மஸ்தலா மற்றும் குந்தாபூர் பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளன. கர்நாடக சாரிகே வகை பஸ்கள் மட்டும் இயக்கப்படுகின்றன. சேலம் வழியாக கர்நாடகாவில் இருந்து கேரளாவுக்கு செல்லும் பஸ்களில் பாதிப்பு இல்லை.












Click it and Unblock the Notifications