''தரவுகளை பாருங்கள் புரியும்..கும்பமேளா கொரோனா 'சூப்பர்-ஸ்ப்ரெடர்' இல்லை''.. உயர் அதிகாரி சொல்கிறார்
ஹரித்வார்: கும்பமேளாவை "சூப்பர்-ஸ்ப்ரெடர்" என்று அழைப்பது நியாயமற்றது என்று கும்பமேளா போலீஸ் உயர் அதிகாரி சஞ்சய் குன்ஜால் கூறினார்.
இந்தியா முழுவதும் முதல் அலையை விட இரண்டாவது அலை பாடாய்படுத்தி விட்டது தற்போது கொரோனா தொற்று குறைந்து ஆறுதல் அளிக்கிறது.
ஆனால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, படுக்கைகள் தட்டுப்பாடு என்று நாடே அல்லாடி கொண்டிருந்தது.

கும்பமேளாதான் காரணம்
நாடு முழுவதும் கொரோனா 2-வது அலைக்கு ஹரித்துவார் கும்பமேளாதான் காரணம் என்று பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டினார்கள். இமயமலை அடிவாரத்தில் இருக்கும் ஹரித்துவார் நகரில் லட்சக்கணக்கான இந்து பக்தர்கள் கும்பமேளா திருவிழாவுக்காக கூடினார்கள். கும்பமேளா திருவிழாவில் கலந்து கொண்டு திரும்ப வந்தவர்களில் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் என்றும் அவர்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவியது என்று புகார்கள் கூறப்பட்டு வருகிறது.

"சூப்பர்-ஸ்ப்ரெடர்" அல்ல
இந்த நிலையில் கும்பமேளாவை "சூப்பர்-ஸ்ப்ரெடர்" என்று அழைப்பது நியாயமற்றது என்று கும்பமேளா போலீஸ் உயர் அதிகாரி சஞ்சய் குன்ஜால் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:- ஜனவரி 1 முதல் ஏப்ரல் 30 வரை ஹரித்வார் மாவட்டத்தில் 8.91 லட்சம் ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்பட்டது. இதில் பாஸிட்டிவ் விகிதம் 1,954 (0.2 சதவீதம்) மட்டுமே. ஜனவரி 1 முதல் கும்பமேளா நிகழ்வு முடிவடையும் வரை ஹரித்வாரில் நடத்தப்பட்ட மொத்த ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகளில் நேர்மறை விகிதம் வெறும் 0.2 சதவீதம் மட்டுமே இதை கோவிட் "சூப்பர் ஸ்ப்ரெடர்" என்று அழைப்பது நியாயமற்றது.

தரவுகள் காட்டுகின்றன
கும்பமேளாவை ஒரு சூப்பர் ஸ்ப்ரெடர் நிகழ்வாக கருத முடியாது என்பதற்கான மற்றொரு காரணத்தையும் நாம் பார்க்க வேண்டியதிருக்கிறது. அதாவது கும்பமேளா பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 16,000 க்கும் மேற்பட்ட காவல்துறையினரில் 88 பேர் மட்டுமே ( 0.5 சதவீதத்திற்கு சற்று மேல்) ஏப்ரல் 30-க்குள் கொரோனாவுக்கு நேர்மறை தொற்றை கண்டறிந்துள்ளனர்.

ஏற்கனவே பரவியது
ஜனவரி 1 முதல் ஏப்ரல் 30 ஆம் தேதி கும்பமேளா நிகழ்வு முடியும் வரை ஹரித்வார் மாவட்டத்தின் கோவிட் 19 தரவை விஞ்ஞானரீதியாக ஆராய்ந்தால் கும்பமேளா தொற்றுநோயை பரவக்கூடியது அல்ல என்ற விவரம் தெளிவாக தெரியவரும். கும்பமேளாவின் முக்கிய நிகழ்வு ஏப்ரல்1-ம் தேதி தொடங்கியபோது மகாராஷ்டிரா, ஹரியானா போன்ற மாநிலங்களில் ஏற்கனவே கொரோனா தொற்று அதிகமாக இருந்தது என்று சஞ்சய் குன்ஜால் தெரிவித்தார்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications