கடல் மார்க்கமாக இந்தியாவைத் தாக்க லஷ்கர் திட்டம்.. ஐபி எச்சரிக்கை
டெல்லி: கடல் மார்க்கமாக இந்தியாவில் தாக்குதல் நடத்த லஷ்கர் இ தொய்பா அமைப்பு திட்டமிட்டு வருவதாக சமீபத்திய ஐபி அறிக்கை மத்திய அரசை எச்சரித்துள்ளது.
குஜராத் கடல் பகுதியில் பாகிஸ்தான் படகு வீழ்த்தப்பட்ட விவகாரம் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், விவாதங்கள் நடந்து வரும் நிலையில், லஷ்கர் இ தொய்பா அமைப்பு புதிய தாக்குதல்களை திட்டமிட்டு வருவதாக ஐபி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சமீபத்தில் ஐபி தரப்பில் மத்திய உள்துறையிடம் சமர்ப்பிக்கப்பட்ட ரகசிய அறிக்கையில், லஷ்கர் இ தொய்பா அமைப்பின் கடற் பிரிவானது, புதிய திட்டங்களை தீட்டி வருகிறது. அதன்படி இந்தியாவின் கடற்படை தளங்கள், பிற முக்கிய இடங்களைத் தாக்கும் வகையில் கடல் மார்க்கமாக தீவிரவாதிகளை அனுப்ப அது திட்டமிட்டுள்ளதாம்.
இந்த எச்சரிக்கையான கிரேட் ஏ அலர்ட் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது அதி நம்பகத்துக்குரிய எச்சரிக்கை என்று பொருளாம்.
இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி குஜராத்துக்கு அருகே பாகிஸ்தான் படகு சிக்கிய சம்பவம் இருக்கலாம் என்றும் ஐபி கூறுகிறது. பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயின் ஆதரவுடன் செயல்பட்டு வரும் லஷ்கரின் திட்டத்தில் இது ஒரு பகுதிதான் என்று பாதுகாப்புப் படையினர் நம்புகின்றனர்.
மேலும் கடந்த 26/11 தாக்குதலின்போது எப்படி பாகிஸ்தான் கடற்படை தீவிரவாதிகளுக்கு உதவியாக இருந்ததோ, அதேபோல இந்த முறையும் பாகிஸ்தான் கடற்படை ஆதரவுடன் தீவிரவாதிகள் தங்களது சதிச் செயலை அரங்கேற்ற முனையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 26/11 தாக்குதலுக்கு முன்பாக தனது தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் கடற்படையினரிடம் தீவிர பயிற்சி பெற்று பின்னரே லஷ்கர் அமைப்பு, மும்பைக்கு படகு மூலம் தீவிரவாதிகளை அனுப்பியது என்பது நினைவிருக்கலாம்.
இந்தியாவுக்குள் எளிதாக ஊடுறுவ கடல் மார்க்கமே சிறந்தது என்பதால் இந்தத் திட்டத்தை லஷ்கர் இ தொய்பா தொடர்ந்து தனது முதல் சாய்ஸாக வைத்திருப்பதாகவும் ஐபி கூறுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications