சியாச்சின் பனிச் சிகரத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய இலகு ரக தாக்குதல் ஹெலிகாப்டர்
பெங்களூரு: இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிட்டெட் நிறுவனத்தின் தயாரிப்பான இலகு ரக தாக்குதல் ஹெலிகாப்டர் சியாச்சின் பனிச் சிகரத்தில் தரையிறங்கி சாதனை படைத்துள்ளது. சியாச்சின் பனிச் சிகரத்தில் தரையிறங்கிய முதல் தாக்குதல் ஹெலிகாப்டர், இந்த எல்சிஎச்தான்.
இதன் மூலம் அதிக உயரத்தில் தரையிறங்கும் சோதனையை வெற்றிகரமாக நடத்தியிருப்பதாக எச்.ஏ.எல். அறிவித்துள்ளது.

இதுகுறித்து எச்.ஏ.எல். தலைவரும், நிர்வாக இயக்குநருமான டி. சுவர்ண ராஜு ஒன்இந்தியாவிடம் கூறுகையில், இந்த சோனைகள் ஆரம்ப கட்ட செயல்பாட்டு அனுமதிக்கு முந்தைய முக்கிய சோதனைகள் ஆகும். இவை வெற்றி பெற்றிருப்பது திருப்தி தருகிறது.
இந்த சோதனைகள் அனைத்தும் எதிர்பார்த்த முடிவுகளைக் கொடுத்துள்ளன. இது திருப்தி அளிக்கிறது. லேவில் நடந்த சோதனையானது, ஹெலிகாப்டரின் சிறப்பான செயல்பாட்டையும், குறைந்த வேகத்தில் ஹெலிகாப்டர் செயல்படும் விதத்தையும் சரியான முறையில் நிரூபித்துள்ளது. அதிக உயரத்தில் மோசமான வானிலையிலும் கூட ஹெலிகாப்டர் சிறப்பாக செயல்பட்டது.
சியாச்சினில் உள்ள இறங்கு தளத்தில் சரியான முறையில் இறங்கி, மேலெழும்பி இலகு ரக தாக்குதல் ஹெலிகாப்டர் சிறப்பாக செயல்பட்டது.
சியாச்சின் இறங்கு தளத்தில் தரையிறங்கிய முதல் தாக்குதல் ஹெலிகாப்டர் எல்.சி.எச்தான் என்பது மகிழ்ச்சி தருவதாகும் என்றார் அவர்.
லே பகுதியில் நடந்த சோதனையின்போது 3வது புரோட்டோடைப் எல்.சி.எச். பயன்படுத்தப்பட்டது. அப்போது அங்கு வெப்பநிலை 13 முதல் 17 டிகிரி சென்டிகிரேட் ஆக இருந்தது. இந்திய விமானப்படையின் பைலட்டுகள், ராணுவ அதிகாரிகள், செமிலாக் மற்றும் டிஜிஏக்யூஏ நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இந்த சோதனையில் பங்கேற்றனர்.
எச்.ஏ.எல் அதிகாரிகள் மேலும் கூறுகையில் எப்போதுமே லே பகுதியில் மேற்கொள்ளப்படும் சோதனைகள் சவாலாகவே இருக்கும். அதேசமயம், ஆச்சரியங்களும் அடங்கியிருக்கும். லடாக் மற்றும் கிழக்கு காரகோரம் பகுதியில் சிந்து நதி மற்றும் அதன் கிளை நதிகளான நூபுரா மற்றும் ஷியோக் ஆகியவை உற்பத்தியாகின்றன.

மேலும் பெரிய பெரிய மலைச் சிகரங்களும் இங்கு உள்ளன. இங்குள்ள மலைச் சிகரங்கள் 25,000 அடி உயரம் வரை இருக்கும். இங்கு சாதாரண மலைச் சிகரமே 20,000 அடி வரை இருக்கும். மிகவும் அடர்த்தியான அதிக அளவிலான பனிச் சிகரங்களைக் கொண்ட சவாலான, அபாயகரமான பகுதி இதுவாகும். 3வது பனிப் பிரதேசம் என்று கூட இதை அழைக்கப்படுகிறது.
சியாச்சின்தான் இதில் உயரமான பனிச் சிகரமாகும். இங்கு கோடை காலத்தில், ஜூலை - ஆகஸ்ட் மாதத்தில் வெப்ப நிலை 30 டிகிரி வரை அதிகரிக்கும் என்றனற்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications