சவுதியில் சிக்கித் தவிக்கும் 63 மீனவர்களை மீட்க வேண்டும்- சுஷ்மாவுக்கு ஜவாஹிருல்லா கடிதம்
டெல்லி: சவுதியில் சிக்கித் தவிக்கும் 63 இந்திய மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு மனிதநேய மக்கள் கட்சி கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளது.
இதுதொடர்பாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "ராமநாதபுரம், நாகப்பட்டினம், கடலூர், தஞ்சை, கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் மற்றும் கேரள மாநில மீனவர் உட்பட 63 இந்திய மீனவர்கள் சவுதி அரேபியாவின் கிழக்கு மாகாணம் ஜுபைல் நகரில் கடந்த 5 ஆண்டுகளாக சிக்கித் தவித்து வருகிறார்கள் என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.

யூசுப் கலில் இப்ராஹிம் அல்-அமோரி என்ற நிறுவனத்தில் மீன்பிடி வேலைகளுக்காக இம்மீனவர்கள் சென்றுள்ளனர். கடந்த ஆறு மாதங்களாக இந்திய மீனவர்களுக்கான சம்பளம் கொடுக்கப்படாததால் அவர்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினரும் மீனவர்களை மீட்டுத் தருமாறு டெல்லியில் உள்ள வெளியுறவுத் அமைச்சகத்திற்கும், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியருக்கும் கோரிக்கை மனுவை அளித்துள்ளனர். எனவே, சவுதி அரேபியாவில் பரிதவிக்கும் இந்திய மீனவர்களை மீட்டு உரிய நடடிவக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications