மத்தியபிரதேசத்தில் மாஸ்க் அணியாத இளைஞர் மீது மிருகத்தனமாக தாக்குதல் - ராகுல்காந்தி கண்டனம்
கொரோனா விதிகளை அமல்படுத்தும் போர்வையில் இத்தகைய வெட்கக்கேடான மனிதாபிமானமற்ற தன்மையை நாடு ஏற்கவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்
போபால்: மத்தியப்பிரதேசத்தில் முகக்கவசம் சரியாக அணியவில்லை என கூறி இளைஞர் ஒருவரை பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் போலீசார் கடுமையாக தாக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்.பியுமான ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
மத்தியப்பிரதேசத்தின் இந்தூரை சேர்ந்த கிருஷ்ணா கேயர் என்ற இளைஞர் மருத்துவமனையில் உள்ள தனது தந்தைக்கு உணவை எடுத்துச் சென்ற போது போலீசார் அவரை தடுத்து நிறுத்தி முகக்கவசம் சரியாக அணியவில்லை என கூறி காவல் நிலையத்திற்கு அழைத்துள்ளனர். தொடர்ந்து, அவர் வர மறுத்ததால் ஆத்திரமடைந்த போலீசார் அந்த நபரை சாலையிலேயே கடுமையாக அடித்து உதைத்து தாக்கியுள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதுபற்றி கருத்து தெரிவித்த பாதிக்கப்பட்ட நபர், முகக்கவசம் சரியாக அணியவில்லை என கூறி காவல் நிலையத்திற்கு வரும்படி தன்னிடம் கூறிய போலீசார், திடீரென அடித்து உதைத்ததாக குறிப்பிட்டார்.
கொரோனா விதிகளை அமல்படுத்தும் போர்வையில் இத்தகைய வெட்கக்கேடான மனிதாபிமானமற்ற தன்மையை நாடு ஏற்கவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.
कोरोना नियमों को लागू करने की आड़ में इस तरह की शर्मनाक अमानवीयता देश को स्वीकार नहीं!
— Rahul Gandhi (@RahulGandhi) April 7, 2021
सुरक्षा करने वाले पुलिसकर्मी ही अत्याचार करें तो जनता कहाँ जाये?#Indore pic.twitter.com/t3Ifv0ajJ0
ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், கொரோனா விதிகளை அமல்படுத்தும் போர்வையில் இத்தகைய வெட்கக்கேடான மனிதாபிமானமற்ற தன்மையை நாடு ஏற்கவில்லை! என்று குறிப்பிட்டுள்ள ராகுல்காந்தி, பாதுகாப்பு போலீசார் சித்திரவதை செய்தால், பொதுமக்கள் எங்கு செல்வார்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனிடையே போலீசாருக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் இந்த வீடியோ வெளியாகி உள்ளதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்றும் இதுபற்றிய விசாரணையும் நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications