தேர்தல் நாளன்று பிறந்த குழந்தைக்கு.. என்ன பெயர் வச்சிருக்காங்க பாருங்க இந்த அப்பாம்மா!
Recommended Video

இந்தூர்: மத்திய பிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நாள் அன்று பிறந்த குழந்தைக்கு வாக்களிப்பதை அர்த்தப்படுத்தும் வகையில் அதன் பெற்றோர் பெயர் வைத்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்துக்கு கடந்த 28-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. மொத்தம் 230 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. காடேகான் தொகுதியில் வாக்களிப்பதற்காக சந்தோஷ் (26) என்பவர் பதற்றத்துடன் வரிசையில் நின்று கொண்டிருந்தார்.
அவர் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வந்தவுடன் வாக்களித்துவிட்டு விறுவிறுவென மருத்துவமனைக்கு ஓடினார். அங்கு அவரது மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

வாக்களிப்பது
இதையடுத்து அந்த குழந்தைக்கு மட்தான் (வாக்களிப்பு) என்று பெயர் வைக்க அந்த தம்பதியினர் முடிவு செய்தனர். இதுகுறித்து சந்தோஷ் கூறுகையில், நாம் எந்த சூழலில் இருந்தாலும் வாக்களிப்பதை விடக் கூடாது.

மாற்றலாம்
எனவே என் மாநிலத்தில், என் பகுதியில் உள்ள அனைவருக்கும் வாக்களிப்பதை ஊக்கப்படுத்துவதற்காகவே எனது குழந்தைக்கு அந்த பெயரை சூட்டியுள்ளேன். இதனால் பள்ளியில் பெயர் கொடுக்கும் போது சில பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். அப்போது வேண்டுமானால் மகன் விருப்பப்பட்டால் பெயரை மாற்றிக் கொள்ளலாம்.

நம்பிக்கை
பெயர் வைப்பது குறித்து என் குடும்ப உறுப்பினர்களுக்கு நான் கூறியவுடன் அனைவரும் ஒப்புக் கொண்டனர். இந்த பெயர் சட்டரீதியான சிக்கலையும் ஏற்படுத்தாது என நம்புகிறேன்.

தூரம்
சந்தோஷ் மனைவி அனுமதிக்கப்பட்ட மருத்துவமனைக்கும் வாக்குச் சாவடிக்கும் 130 கி.மீ. தூரம் ஆகும். இவர் மனைவியை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு வாக்களித்துவிட்டு மீண்டும் திரும்புவதற்குள் குழந்தையே பிறந்துவிட்டது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications