நடத்தையில் சந்தேகம்.. மனைவியுடன், மாமியாரையும் சேர்த்து கொன்ற ஹோட்டல் அதிபர்
பெங்களூர்: மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன், மனைவியையும், மாமியாரையும் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது. இதனால் தம்பதியின் இரு குழந்தைகளும் நடுத்தெருவில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
பெங்களூர், விஜயநகரை சேர்ந்தவர் குமார் (40). இவரது மனைவி வசந்தா 34. இத்தம்பதிக்கு இன்சாரா என்ற பத்து வயது மகளும், தேஜாஸ் கவுடா என்ற 5 வயது மகனும் உள்ளனர். குமார், அந்த ஏரியாவில் அசைவ ஹோட்டல் மற்றும் கேட்டரிங் தொழில் நடத்தி வருகிறார்.

நன்றாக போய்க் கொண்டிருந்த இவர்கள் வாழ்க்கையில், சமீபகாலமாக புயல் வீச தொடங்கியுள்ளது. வசந்தாவுக்கு சொந்தமாக ஒரு நில சைட், பெங்களூரில் இருந்துள்ளது. அதை விற்று பணமாக தருமாறு, குமார் கேட்க தொடங்கியுள்ளார். இதை வசந்தாவும், அவரது தாய் லீலாம்மாவும் (61) ஏற்க மறுத்துள்ளனர்.
இதனால், கணவன்-மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், குமாருக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதை வசந்தா தட்டி கேட்டபோது சண்டை உச்சத்திற்கு சென்றுள்ளது. மேலும், வசந்தாவின் நடத்தை மீது குமாருக்கு சந்தேகம் ஏற்பட்டு அதற்காகவும் சண்டை போட்டதாக தெரிகிறது.
இந்நிலையில், சம்பவத்தன்று, வசந்தா தனது இரு குழந்தைகளுடன், பக்கத்து ஏரியாவான ஆர்பிசி லேஅவுட்டிலுள்ள தனது தாய் வீட்டுக்கு போய்விட்டார். குமார், நேரில் சென்று கூப்பிட்டும் வீடு திரும்ப மறுத்துவிட்டாராம். அப்போது, கள்ளக்காதலனுடன் உல்லாசம் அனுபவிக்கதான், இங்கு வந்து தங்கியுள்ளாயா என்று குமார் கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த லீலாம்மா மருமகனை கண்டித்துள்ளார்.
ஏற்கனவே, மகளுக்காக லீலாம்மா ஆதரவு அளித்துவருவதால் ஆத்திரத்தில் இருந்த குமார், சமையலறைக்கு சென்று கத்தியை எடுத்து வந்து, மனைவியையும், மாமியாரையும் சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே அவ்விருவரும் உயிரிழந்தனர். இதையடுத்து வீட்டுக்கு வெளியே வந்த குமார், "நான் கொன்னுட்டேன்.. நான் கொன்னுட்டேன்" என்று கன்னடத்தில் சொல்லி கத்தியுள்ளார்.
அதிர்ச்சியடைந்த பக்கத்து வீட்டுக்காரர்கள், ஓடி சென்று, பார்த்தபோது, தாயும், மகளும் ரத்த வெள்ளத்தில் இருந்தது தெரியவந்தது. அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் விஜயநகர் போலீசார் சம்பவ இடத்தில் பரிசீலனை நடத்தினர். குமாரை கைது செய்தனர்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications