மணிப்பூர் சட்டசபை தேர்தலில் பகீர்- வேட்பாளரின் தந்தை மீது துப்பாக்கிச் சூடு- பாஜக மீது புகார்
இம்பால்: மணிப்பூர் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் என்.பி.பி. கட்சி வேட்பாளரின் தந்தை துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேட்பாளரின் தந்தை மீது பாஜகவினரே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக என்.பி.பி. கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
60 இடங்களைக் கொண்ட மணிப்பூர் சட்டசபைக்கு வரும் 27-ந் தேதி, மார்ச் 5-ந் தேதி ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் முதலில் அறிவித்தது. ஆனால் வாக்குப் பதிவு நடைபெறும் 27-ந் தேதி தேவாலயங்களில் நிகழ்வுகள் இருப்பதால் தேர்தல் தேதியை மாற்றி வைக்க வேண்டும் என்கிற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

மணிப்பூர் தேர்தல்
இதனையடுத்து மணிப்பூரில் வரும் 28 மற்றும் மார்ச் 5 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. மணிப்பூரில் காங்கிரஸ் செல்வாக்காக இருந்தது. ஆனால் கூண்டோடு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு தாவியதால் அம்மாநிலத்தில் காங்கிரஸின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது. இம்மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் அனல் பறந்து கொண்டிருக்கிறது.

சரமாரி துப்பாக்கி சூடு
இந்நிலையில் என்.பி.பி. எனப்படும் தேசிய மக்கள் கட்சியின் ஆண்ட்ரோ சட்டசபை தொகுதி வேட்பாளர் சஞ்சோய் சிங் தமது வீட்டில் தந்தை மற்றும் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் வேட்பாளர் சஞ்சோய் சிங்கின் தந்தை படுகாயம் அடைந்தார். இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஆண்ட்ரோ தொகுதியில் பல இடங்களில் வன்முறைகள் வெடித்தன. இதில் 7 பேர் படுகாயமடைந்தனர்.

பாஜக மீது புகார்
தேசிய மக்கள் கட்சி வேட்பாளர் சஞ்சோய் சிங் அண்மையில்தான் பாஜகவில் இருந்து விலகினார். இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினரே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தேசிய மக்கள் கட்சி புகார் தெரிவித்துள்ளது. ஆனால் இதனை முதல்வர் பைரோன்சிங் நிராகரித்துள்ளார். மேலும் இச்சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் எனவும் முதல்வர் பைரோன்சிங் உறுதியளித்துள்ளார். இச்சம்பவத்துக்கு மேகாலயா முதல்வரும் தேசிய மக்கள் கட்சித் தலைவருமான கான்ராட் சங்மா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

10 தொகுதிகளில் வன்முறைகள்
மணிப்பூரில் சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக பல இடங்களில் வன்முறை வெடித்துள்ளது. 10-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. வன்முறைகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மணிப்பூர் முதல்வர் பைரோன்சிங் எச்சரித்துள்ளார்.
-
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்! -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
ஆதரவாளர்களுடன் சரத்குமார் ரகசிய ஆலோசனை.. மீண்டும் உதயமாகிறதா சமக.. அதிர்ச்சியில் பாஜக -
30+ தொகுதியில் போட்டி? தமிழகத்தில் பாஜக எந்தெந்த தொகுதிகளில் களமிறங்குகிறது.. வெளியான முக்கிய தகவல் -
எடப்பாடி பழனிசாமிக்கே ஷாக்.. மாப்பிள்ளை அவர் தான்.. ஆனால் சட்டை? பாஜக வெயிட்டிங் கேம் பின்னணி என்ன? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா? -
2 தொகுதிகளில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் ரங்கசாமி.. புதுச்சேரி முதல்வரின் 2 சீட் வெற்றி ஃபார்முலா -
மம்தாவுக்கு குடைச்சலை கொடுக்கும் பாஜக.. மேற்கு வங்கத்தில் மலரும் தாமரை? 7 முக்கிய பாயிண்டுகள் -
திருச்செந்தூர் சென்ற புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி.. பேச்சுவார்த்தையில் எஸ்கேப்.. பரிதவிக்கும் பாஜக -
"மிஷன் கேரளா.." சத்தமே இல்லாமல் இறங்கிய ஆர்எஸ்எஸ்.. தேர்தலில் காத்திருக்கும் ட்விஸ்ட்!












Click it and Unblock the Notifications