அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்த ஜிஎஸ்டி.. என்ன பலன் தெரியுமா?
ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட பின் மக்கள் மீது மறைமுகமாக விதிக்கப்பட்ட வரிகள் குறைக்கப்பட்டு, மிக குறைத்த அளவில் ஜிஎஸ்டி மட்டும் விதிக்கப்பட்டு வருகிறது.
டெல்லி: ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட பின் மக்கள் மீது மறைமுகமாக விதிக்கப்பட்ட வரிகள் குறைக்கப்பட்டு, மிக குறைத்த அளவில் ஜிஎஸ்டி மட்டும் விதிக்கப்பட்டு வருகிறது. இது அடித்தட்டு மக்களுக்கும், நடுத்தர வர்க்கத்து மக்களுக்கு பேருதவியாக உள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை காரணமாக மிக அத்தியாவசிய பொருட்களான சோப், பேஸ்ட், எண்ணெய், பிளேடு, ஷாம்பு, பவுடர் ஆகியவைகளின் விலை குறைந்தது. இதன் மீதான வரி 26 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக குறைக்கப்பட்டது. அதேபோல் காலணிகள் மீதான வரி 10 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதமாக குறைக்கப்பட்டது.

உணவுப் பொருட்களிலும் இதேபோல் வரிவிதிப்பு முறை ஜிஎஸ்டி காரணமாக குறைக்கப்பட்டது. நொறுக்குத்தீனிகள் வரி 6ல் இருந்து 5 சதவிகிதமாக குறைக்கப்பட்டது. இட்லி, தோசை மீதான வரி 12 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதமாக குறைந்தது. அதேபோல் சப்பாத்தி மீதான வரி 12ல் இருந்து 5 சதவிகிதமாக குறைக்கப்பட்டது. மினரல் வாட்டர் மீதான வரி 27ல் இருந்து 18 சதவிகிதமாக குறைக்கப்பட்டது. இறுதியாக ஜிஎஸ்டி வடிவமைக்கப்பட்ட பின் கிட்டத்தட்ட 33 சதவிகிதம் பொருட்களின் மீதான வரி குறைந்தது. இது எதிர்காலத்தில் கொள்முதலை அதிகரிக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொருளாதாரத்துறை அமைச்சர் அருண் ஜேட்லி தனது வலைப்பக்கத்தில் கடந்த ஜூலை 27ம் தேதி எழுதியதன் படி, இந்தியாவில் மொத்தம் 384 அத்தியாவசிய பொருட்களின் விலை மொத்தமாக குறைக்கப்பட்டுள்ளது. மாறாக ஒரு பொருளின் விலை கூட உயர்த்தப்படவில்லை.
[கச்சா எண்ணை விலையேற்றத்திற்கு நடுவேயும், விலைவாசியை கட்டுக்குள் வைத்துள்ள மத்திய அரசு!]
இதற்கு முன் இந்தியாவில் இவ்வளவு பெரிய வரி புரட்சி சுதந்திரத்திற்கு பின் செய்யப்படவில்லை. இதன் மூலம் குறைந்த விலையில் அதிக வருமானம் சாத்தியம் ஆனது. அதேபோல் இறுதியாக வாஷிங் மிஷின், பிரிட்ஜ், வேக்கம் கிளீனர், டீவிக்களின் விலை கூட குறைந்தது. இதன் மீதான வரி 10 சதவிகிதம் வரை குறைந்தது.

ஜிஎஸ்டி காரணமாக பொருட்களின் உற்பத்தியும், விற்பனையும் அதிகம் ஆனது. ஜிஎஸ்டி தயாரிப்பை குறிக்கோளாக கொண்டு உருவாக்கப்பட்டது. கஸ்டமர்களை மட்டுமில்லாமல் இடையில் இருக்கும் எல்லோரையும் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது. மொத்தமாக் 0 சதவிகிதம், 5 சதவிகிதம், 12 சதவிகிதம், 18 சதவிகிதம், 28 சதவிகிதம் என்று ஐந்து வகையான ஜிஎஸ்டி வரிக்குறைப்பு செய்யப்பட்டது. ஆனால் பெட்ரோல்,டீசல், மது, மின்சாரம், ஆகியவை ஜிஎஸ்டிக்கு கீழே கொண்டு வரப்படவில்லை. இதற்கு முன் எப்படி இதற்கு மாநில அரசுகள் மூலம் வரி செலுத்தப்பட்டதோ அப்படியே இப்போதும் செலுத்தப்படுகிறது.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications