For Daily Alerts
Just In
மக்களவையில் அமளியில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை – சபாநாயகர் சுமித்ரா மகாஜன் எச்சரிக்கை
டெல்லி: மக்களவையில் தேவையில்லாத அமளி, துமளிகள் கூடாது என்று சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.மேலும், மக்களவையில் குழப்பத்தை ஏற்படுத்தும் எம்.பிக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், " நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு மாறாக அவையில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டால் முதலில் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவேன் . அப்படியும் நிலைமை சரியாகவில்லை என்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறியுள்ளார்.
மேலும், எம்.பி.க்கள் கூச்சல் குழப்பத்தில் ஈடுபடுவதைத் தடுக்க தேவை ஏற்பட்டால் விதிமுறைகள் வகுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
Comments
English summary
Sumitra Mahajan may be described as soft spoken and mild mannered and fondly called 'tai' (elder sister), but the new Lok Sabha Speaker is not averse to taking "strong" action against erring members to maintain decorum in the House.
Story first published: Monday, June 16, 2014, 9:51 [IST]