ரஜினியும் கமலும் மக்களுக்கு என்ன செஞ்சாங்க? - அமைச்சர் செல்லூர் ராஜு காட்டம்: வீடியோ
ரஜினியும் கமலும் மக்களுக்கு அவர்கள் துன்பப்படும் காலத்தில் என்ன செய்தார்கள் என அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி எழுப்பியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
திருப்பதி: நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் ஆகியோர் மக்கள் துன்பப்பட்ட காலங்களில் அவர்களுக்காக என்ன செய்தார்கள் என அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி எழுப்பியுள்ளார்.
அமைச்சர் செல்லூ ராஜு திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வந்து குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின் படி தமிழகத்தில் ஆட்சி சிறப்பாகவே நடக்கிறது. இருந்தாலும் பத்திரிகைகளும் ஊடகங்களும் அரசை கேள்வி கேட்டு வெளுத்து வாங்குகின்றன.

கமல், ரஜினி என யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால் இவர்கள் இருவரும் மக்கள் துன்பப்பட்ட காலங்களில் எல்லாம் அவர்களுக்காக என்ன செய்தார்கள்? என கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications