மிசோரத்தில் கொடூரம்: பாட்டியின் சகோதரியை பலாத்காரம் செய்த 16 வயது சிறுவன்
அய்ஸ்வால்: மிசோரத்தில் 16 வயது சிறுவன் தனது பாட்டியின் சகோதரியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
மிசோரம் மாநிலம் கிழக்கு சம்பாய் மாவட்டத்தில் உள்ள காவ்துங்சே கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் தனது தந்தையின் அம்மா அதாவது பாட்டியின் சகோதரியை கடந்த இரண்டு வாரங்களில் பல முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
67 வயதான அந்த பெண்ணுக்கு பார்வை கோளாறு மற்றும் மனநல பாதிப்பு உள்ளது. தற்போது மிசோரமில் அறுவடை காலம் என்பதால் அனைவரும் வயலுக்கு செல்லும் வரை காத்திருந்த சிறுவன் அனைவரும் கிளம்பிய பிறகு பாட்டியை கட்டிப் போட்டு பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் அந்த மூதாட்டி தன்னை யாரோ கட்டி வைத்து பலாத்காரம் செய்வதாக உறவினர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து உறவினர்கள் ஒளிந்து பார்த்தபோது தான் சிறுவன் பாட்டியை பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.
இது குறித்து பாதிக்கப்பட்ட பாட்டியின் மகன் போலீசில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுவனை இன்று கைது செய்தனர். அவரை சம்பாய் மாவட்ட சிறுவர் சீர்திருத்த பள்ளியில் நாளை சேர்க்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சிறுவனின் பெற்றோர் சட்டவிரோதமாக மதுபானங்கள் கடத்துவோர் என்று அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்.