ரபேல் விமானத்தின் உத்தேச தொகை ஏற்கனவே சமர்பிக்கப்பட்டுவிட்டது.. மத்திய அரசு அறிக்கை
ரபேல் விமானம் வாங்கியது குறித்த உத்தேச தொகை ஏற்கனவே பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுவிட்டதாக மத்திய அரசு கூறியுள்ளது.
டெல்லி: ரபேல் விமானம் வாங்கியது குறித்த உத்தேச தொகை ஏற்கனவே பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுவிட்டதாக மத்திய அரசு கூறியுள்ளது. ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து தற்போது மத்திய அரசு பதில் அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.
காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போதே இந்த விமானம் வாங்க பிரான்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனாலும் எல்லாப் பேச்சு வார்த்தையும் முடிந்தும் ஒப்பந்தம் மட்டும் கையெழுதக்காமல் இருந்தது. கிட்டத்தட்ட 4 வருடங்கள் இந்த ஒப்பந்தம் இழுத்தடிக்கப்பட்டு இப்போதுதான் வெற்றிகரமாகக் கையெழுத்து ஆனது.

ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் ஒரு விமானம் வாங்க 80 மில்லியன் டாலர் ஆகும் என்று கூறப்பட்டது. தற்போது பாஜக ஆட்சியில் உத்தேசமாக 214 (டாலர் )மில்லியனுக்கு ஒரு விமானம் என்று பேசி முடிக்கப்பட்டு உள்ளது. இதன் உண்மையான விலை 740 (டாலர்) மில்லியன் ஆகும்.
இதன் காரணமாக ரபேல் விமானம் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளது என்று ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார். பாஜக கட்சி இதில் உண்மைகளை மறைப்பதாக அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
பாராளுமன்ற கூட்டத் தொடரில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ரபேல் பைட்டர் விமானம் குறித்து காங்கிரஸ் கட்சியினர் கேள்வி எழுப்பினார்கள். ஆனால் நிர்மலா சீதாராமன் இதற்குப் பதில் அளிக்க மறுத்துவிட்டார். இது ராணுவ ரகசியம் இதையெல்லாம் வெளியிட முடியாது என்று குறிப்பிட்டு இருந்தார்.
இது பெரிய பிரச்சனையாக மாறியது. தற்போது இதுகுறித்து மத்திய அரசு விளக்கம் கொடுத்து இருக்கிறது. அதன்படி ரபேல் விவகாரத்தில் எந்த விதமான ஊழலும் நடக்கவில்லை என்று கூறியுள்ளது.
மேலும் சென்ற ஆட்சியில் நடந்த பேச்சுவார்த்தியின் தொடர்ச்சிதான் இது என்றும் கூறியுள்ளது. அதுபோல் இதன் உத்தேசம் தொகை ஏற்கனவே பாராளுமன்றத்தில் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்றும் கூறியுள்ளது.
உத்தேச தொகை மட்டுமே கொடுக்கப்படும், ஒவ்வொரு விமானத்தின் தனி தொகை வெளியிட முடியாது அது நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தலாகும். அதை மட்டுமே வெளியிட முடியாது என்று பாதுகாப்பு துறை அமைச்சகம் கூறியுள்ளதாக மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications