பசவேஸ்வராவுக்கு மோடி, அமித் ஷா மரியாதை: லிங்காயத்து வாக்குகளை கவர்வதற்காகவா?
பஷவேஸ்வராவுக்கு நரேந்திர மோடி, அமித்ஷா ஆகியோர் மரியாதை செலுத்துவது லிங்காயத்துகளின் வாக்குகளை பெறுவதற்காகவா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video
பெங்களூர்: பஷவேஸ்வராவுக்கு நரேந்திர மோடி, அமித்ஷா ஆகியோர் மரியாதை செலுத்துவது லிங்காயத்துகளின் வாக்குகளை கவர்வதற்காகவே என்று கருதப்படுகிறது.
கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் வரும் மேத 12-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ராகுல்காந்தியும் அமித்ஷாவும் போட்டிக போட்டிக் கொண்டு பிரசாரம் செய்து வருகின்றனர்.
தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதத்துக்கு குறைவாக உள்ள நிலையில் மாநிலம் முழுவதிலுமுள்ள லிங்காயத்துகள், வீரசைவர்களின் வாக்குகளை பெற காங்கிரஸ் மற்றும் பாஜக குறி வைத்து வருகின்றனர். கர்நாடகத்தில் லிங்காயத்துகள் தனி மதமாகவே அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் 12-ஆவது நூற்றாண்டில் வாழ்ந்த பஷவேஸ்வராவின் பிறந்த நாளையொட்டி அமித்ஷா பெங்களூரில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செய்தார். அதுபோல் லண்டன் தேம்ஸ் நதியில் இருந்தபடியே நரேந்திர மோடி பஷவேஸ்வராவுக்கு மரியாதை செலுத்தினார்.
On his Jayanti, I bow to Bhagwan Basaveshwara. He has a special place in our history and culture. His emphasis on social harmony, brotherhood, unity and compassion always inspires us.
— Narendra Modi (@narendramodi) April 18, 2018
Bhagwan Basaveshwara brought our society together and gave importance to knowledge. pic.twitter.com/akJPVyuH5D
இந்நிலையில் பாஜக சிக்மக்ளூர் தொகுதி எம்பி ஷோபா கரன்ட்லஜே கூறுகையில் பஷவேஸ்வராவின் சிலைக்கு சித்தராமையா மாலை அணிவிப்பதற்கு லிங்காயத்துகளும், வீரசைவர்களும் அனுமதிக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார். லிங்காயத்துக்களுக்கென தனி மத அடையாளம் அரசியலுக்காக கொண்டு வரப்பட்டது என்று பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
My tributes to Basavanna on the auspicious occasion of Basava Jayanti.
— Rahul Gandhi (@RahulGandhi) April 18, 2018
ಬಸವ ಜಯಂತಿಯ ಶುಭ ದಿನದಂದು ಮಹಾಕಾಯಕ ಯೋಗಿ ಬಸವಣ್ಣನವರಿಗೆ ನನ್ನ ಭಕ್ತಿ , ಗೌರವ ಪೂರ್ಣ ನಮನಗಳು
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பஷவேஸ்வரா ஜெயந்திக்கு மரியாதை கொடுப்பதாக டுவிட்டரில் கூறியுள்ளார். இந்த நிலையில் எல்லாரும் பஷவேஸ்வராவை சுற்றியே உள்ளதால் இவர்கள் அனைவரும் பெருவாரியாக உள்ள லிங்காயத்துகளின் வாக்குகளை பெறுவதற்காகவே இதுபோன்று செய்வதாக கூறப்படுகிறது.