சட்டவிரோத மாட்டு இறைச்சி வர்த்தகத்தில் கிடைக்கும் பணம் தீவிரவாதத்துக்கு போகிறது -மேனகா காந்தி
ஜெய்ப்பூர்: சட்ட விரோதமாக நடைபெறும் மாட்டு இறைச்சி வர்த்தகத்தின் மூலமாக வரும் வருமானம் தீவிரவாதத்துக்கு பயன்படுத்தப்படுகிறது என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த 'விலங்குகளுக்காக இந்தியா' என்ற தலைப்பிலான கருத்தரங்கில் கலந்து கொண்டு மேனகா காந்தி பேசியதாவது:

மாட்டிறைச்சியை அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்திலுள்ளது. மேலும் தோல் பொருட்களுக்காகவும் மாடுகள் கொல்லப்படுகின்றன. சீனாவின் மக்கள் தொகையைவிட நாம் குறைந்த மக்கள் தொகை கொண்டவர்கள் என்றபோதிலும் நாம்தான் அவர்களை விட அதிக அளவில் மாடுகளை கொல்கிறோம்..
உத்தர பிரதேச காவல்துறை நான்காண்டுகளுக்கு முன்பு அளித்த ஒரு அறிக்கையின்படி பார்த்தால், சட்ட விரோதமாக மாடுகளை சட்டவிரோதமாக கொல்லும் நபர்களிடமிருந்து தீவிரவாதத்துக்கு பணம் சப்ளை ஆகிறது.
பசு மாட்டை கொன்றதன் மூலம் கிடைக்கும் பணம்தான் வெடிகுண்டு தயாரிக்கவும், ஆளை கொள்ளும் தீவிரவாதத்துக்கும் பயன்படுத்தப்படுகிறது. நாம் ஏன் இதை அனுமதிக்க வேண்டும். நான் எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தையும் குறித்து கூறவில்லை. இந்திய சட்ட விரோத மாட்டு வர்த்தகத்தை பற்றி மட்டுமே பேசுகிறேன்.
ஒரு மதத்தினர் மாடுகளை அடிமாடுகளாக விற்பனை செய்கின்றனர், இன்னொரு சமூகத்தினர் அதை வெட்டி கொல்கின்றனர். எனவே எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்துடனும் இந்த விவகாரத்தை தொடர்புபடுத்த நான் விரும்பவில்லை.
வங்கதேசம் 160000 டன் மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்வதாக கூறுகிறது. ஆனால் வங்கதேசத்தில் ஒரு பசுமாடு கூட கிடையாது என்பதுதான் உண்மை. அந்த மாட்டிறைச்சி அனைத்தும் இந்தியாவில் இருந்து சட்ட விரோதமாக வங்கதேசம் வழியாக ஏற்றுமதி செய்யப்படுபவைதான் என்பது கண்கூடு.
சமூக அமைப்புகள், தன்னார்வ அமைப்புகள் மற்றும் மக்கள் இணைந்து இந்த சட்ட விரோத தொழிலை நிறுத்த உதவி செய்ய வேண்டும்". இவ்வாறு மேனகா காந்தி பேசினார். மேனகா காந்தி விலங்குகள் உரிமை ஆர்வலர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே மேனகா காந்தி பேச்சுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications