அன்னை தெரசா மிசினரியின் அனைத்து வங்கி கணக்குகள் முடக்கம்- மமதா பரபரப்பு புகார்! மத்திய அரசு மறுப்பு!
கொல்கத்தா: அன்னை தெரசா மிசினரியின் அனைத்து வங்கி கணக்குகளையும் மத்திய அரசு முடக்கிவிட்டதாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி பரபரப்பு புகாரைத் தெரிவித்துள்ளார். ஆனால் அன்னை தெரசா மிசினரியின் வங்கி கணக்குகளை முடக்கவில்லை என மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
மமதா பானர்ஜி இன்று தமது ட்விட்டர் பக்கத்தில், கிறிஸ்துமஸ் நாளில் அன்னை தெரசா மிசினரியின் அனைத்து வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

22,000 பேர் பாதிப்பு
இந்த மிசினரியின் 22,000 நோயாளிகள், பணியாளர்கள் உணவும் மருந்துகளும் இல்லாமல் தவிக்கின்றனர். சட்டம் தமது கடமையை செய்யத்தான் வேண்டும். ஆனால் மனிதாபிமானம் என்பது அதைவிட மேலானது என பரபரப்பு புகாரைத் தெரிவித்துள்ளார்.

மமதா ட்வீட்டால் விவாதம்
மமதா பானர்ஜியின் இப்புகார் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் அனல் பறக்கும் விவாதங்கள் நடந்து வருகின்றன.

சிபிஎம் கருத்து
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எஸ்.கே.மிஸ்ரா தமது ட்விட்டர் பக்கத்தில், அன்னை தெரசா மிசினரியின் அனைத்து வங்கி கணக்குகளையும் கையிருப்பு பணத்தையும் கூட மத்திய அரசு முடக்கி வைத்திருக்கிறது. இந்த மிசினரியில் 22,000 நோயாளிகள், பணியாளர்கள் உணவும் மருந்தும் இல்லாமல் இருக்கின்றனர் என பதிவிட்டுள்ளார். இதேபோல் பல்வேறு கிறிஸ்தவ நிறுவனங்களும் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு விளக்கம்
ஆனால் மமதா பானர்ஜியின் இந்த புகார் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் தெரிவித்துள்ளது. அதில், வெளிநாட்டு நிதி உதவி பெறுவதற்கான அனுமதியை புதுப்பிக்கக் கோரும் Missionaries of Charity-ன் விண்ணப்பம் டிசம்பர் 25-ந் தேதி நிராகரிக்கப்பட்டது. வெளிநாட்டு நிதி உதவி பெறுவதற்கான சட்டவிதிகளை பின்பற்றாத காரணத்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து Missionaries of Charity-யிடம் இருந்து விண்ணப்பத்தை மறுபரிசீலனை செய்யக் கோரி எந்த கோரிக்கையும் எங்களுக்கு வரவில்லை. Missionaries of Charity-க்கான அனுமதி காலம் அக்டோபர் 31-ந் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. இருப்பினும் இந்த அனுமதி காலம் டிசம்பர் 31-ந் தேதி வரை செல்லத்தக்கதாகும். Missionaries of Charity-ன் எந்த ஒரு வங்கி கணக்கையும் மத்திய உள்துறை அமைச்சகம் முடக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications