முல்லை பெரியாறு: கேரளாவிற்கு பதிலடியாக சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்கிறது தமிழகம்
டெல்லி: கேரளாவில் வெள்ளப் பெருக்கு ஏற்பட காரணம், தமிழகத்தின் நடவடிக்கைதான் என்று அம்மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் குற்றம் சாட்டியிருந்தது. இதற்கு பதிலளிக்க தமிழகத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
"முல்லைப் பெரியாறு அணையில் 139 அடி தண்ணீர் இருக்கும் போது படிப்படியாக தண்ணீரை திறந்துவிட்டு இருந்தால், இடுக்கி அணையில் இருந்து மெல்ல மெல்ல நாங்களும் தண்ணீரை திறந்திருக்க முடியும். ஆனால், தமிழகம் 142 அடி வரை காத்திருந்து அதன் பிறகு தண்ணீர் திறந்துவிட்டதால், மொத்தமாக இடுக்கி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டியதாயிற்று. இதன் காரணமாக கேரளாவில் பெரும் அழிவு ஏற்பட்டது" என்று சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு நேற்று தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தெரிவித்தது.

இதனிடையே, இன்று முல்லை பெரியாறு அணை நீர் மட்டம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் அதிகரிக்கப்படாமல் இருப்பதை மத்திய நீர்வளத்துறை செயலாளர் தலைமையிலான துணைக்குழு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம், உத்தரவிட்டது.
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை ஆகஸ்ட் 31 வரை 139.9 அடியாக வைத்திருக்க வேண்டும் என்று கூறிய உச்ச நீதிமன்றம், செப்டம்பர் 6ம் தேதிக்குள் கேரளாவின் குற்றச்சாட்டு குறித்து தமிழகம் பதிலளிக்க உத்தரவிட்டது.
இதையடுத்து தமிழகமும் உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உள்ளது. அதில், கேரள அரசின் நிர்வாக திறமையின்மைதான் வெள்ளத்திற்கு காரணம் என்றும், முல்லை பெரியாறு அணை திறக்கப்படும் முன்பே கேரளாவில் வெள்ளம் ருத்ர தாண்டவம் ஆடிவிட்டதையும், குறிப்பிட்டு, ஆதாரங்களோடு உச்சநீதிமன்றத்தில், தகவல்களை தெரிவிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications