குடும்பத்தைக் காப்பாற்ற திருடியாக மாறிய போலீஸ்காரர் மனைவி!

Subscribe to Oneindia Tamil

மும்பை: குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக திருட்டுத் தொழிலில் ஈடுபட்ட போலீஸ் கான்ஸ்டபிளின் மனைவியை மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர்.

அந்தப் பெண்ணின் பெயர் உஷா கத்கர். 40 வயதாகும் இவரது கணவரது பெயர் கிஷன் கத்கர். இவர் குர்லா காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றினார்.

Mumbai: Constable's Wife Turns Thief to Provide for Family, Arrested

அக்டோபர் 3ம் தேதி சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் 58 வயதான அசோக் ராவ்ஜி காம்ப்ளே என்பவரிடமிருந்து ரூ. 16,000 ரொக்கப் பணம், செல்போன் ஆகியவை அடங்கி பையைப் பறித்துக் கொண்டு ஓடி விட்டார் உஷா. சம்பவம் நடந்தபோது காம்ப்ளே மது போதையில் அரை மயக்க நிலையில் இருந்துள்ளார். இதனால் அவரால் உஷாவைப் பிடிக்க முடியவில்லை.

இதையடுத்து அங்கிருந்த ரகசியக் கேமராவின் உதவியால் உஷாவை அடையாளம் கண்ட போலீஸார் வதலா பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து அவரைக் கைது செய்தனர். விசாரணையில்தான் அவர் போலீஸ்காரரின் மனைவி என்று தெரிய வந்தது.

கிசன் கத்கர் கடந்த 2011ம் ஆண்டு குடிபோதையில் தன்னிடமிருந்த துப்பாக்கி வெடித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் குடும்பத்தைக் காப்பாற்ற திருட்டுத் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார் உஷா என்று தெரிய வந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+