அவமானத்தில் தலை குனிந்து நிற்கிறேன்.. சென்னை இளைஞர் குடும்பத்திடம் காஷ்மீர் முதல்வர் உருக்கம்
திருமணி தனது பெற்றோருடன் குல்மார்க்கிலுள்ள ரிசார்ட்டுக்கு பயணம் செய்து கொண்டிருந்தபோது, கல்வீச்சில் சிக்கிக்கொண்டார். இதில், திருமணியின் தாயார் மற்றுமொரு உறவுக்காரர் காயமடைந்துள்ளனர்.
Recommended Video

ஸ்ரீநகர்: அவமானத்தால் தனது தலை தொங்கிப் போயுள்ளதாக சென்னை வாலிபர் கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து காஷ்மீர் முதல்வர் கருத்து தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் நர்பல் என்ற இடத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக் காரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. அப்போது பாதுகாப்பு படையினர் மீது போராட்டக்காரர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தினர்.
இந்த கல்வீச்சில் சிக்கி, சென்னையை சேர்ந்த திருமணி என்ற 22 வயது இளைஞர் தலையில் காயம் பட்டு உயிரிழந்தார்.

சுற்றுலா பயணி
திருமணி தனது பெற்றோருடன் குல்மார்க்கிலுள்ள ரிசார்ட்டுக்கு பயணம் செய்து கொண்டிருந்தபோது, கல்வீச்சில் சிக்கிக்கொண்டார். இதில், திருமணியின் தாயார் மற்றுமொரு உறவுக்காரர் காயமடைந்துள்ளனர்.

கைதுக்கு தீவிரம்
போலீஸ் டிஜிபி சேஷ் பவுல் வாய்ட் கூறுகையில், இரண்டு, மூன்று வாகனங்கள் மீது குண்டர்கள் கல்வீசி தாக்கியுள்ளனர். அதில் சென்னை பயணி பலியாகியுள்ளார் என்றார். மேலும் குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம் என போலீசார் உறுதியளித்துள்ளனர்.

மெகபூபா ஆறுதல்
காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி, திருமணியின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவர், "எனது தலை அவமானத்தால் தொங்கிப்போயுள்ளது" என்று தெரிவித்துள்ளார். இதயம் நொறுங்கிவிட்டது, இது மிக சோகமான சம்பவம் என்றும் முதல்வர் தெரிவித்ததாக அங்குள்ள ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
|
விருந்தினரை கொன்றுள்ளோம்
இந்த சம்பவம் குறித்து ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா டுவிட்டரில் கூறுகையில், "ஒரு சுற்றுலாப் பயணி சென்ற வாகனத்தின் மீது கல்வீசி கொன்றுள்ளோம், விருந்தினரைக் கொன்றுள்ளோம். இந்த சம்பவத்தில் காயமடைந்த மற்றவர்கள் விரைவில் குணமடையவேண்டும். ஜம்மு காஷ்மீர் அரசு தோற்றுப் போனது, முதல்வர் தோற்றுப் போனார், பாஜக-பிடிபி கூட்டணி தோற்றுப் போனது" என்று தெரிவித்துள்ளார்.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications