நான் என்ன குறைச்சலான பதவியா வகிக்கிறேன்?.. டெல்லியில் வாயை விட்ட தம்பிதுரை
நான் துணை சபாநாயகர், என்னுடையது குறைந்த மதிப்புடைய பதவி அல்ல, முதல்வருக்கு இணையான பதவி என்று செய்தியாளர்களின் கேள்விக்கு தம்பிதுரை காட்டமாக பதில் அளித்தார்.
டெல்லி: டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்துக்கு முதல்வர் ஏன் வரவில்லை என்று நிருபர்கள் கேட்ட கேள்விக்கு நான் லோக்சபா துணை சபாநாயகர், முதல்வர் பதவிக்கு இணையானது என்று தம்பிதுரை பதிலளித்தார்.
பயிர்க் கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம், காவிரி நதி நீர் மேலாண்மை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 22 நாள்களாக டெல்லியில் போராடி வருகின்றனர்.
பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டும் மத்திய அரசு அவர்களைக் கண்டு கொள்ளவில்லை. இதனால் மத்திய, மாநில அரசுகள் மேல் தமிழகமே அதிருப்தியில் உள்ளது. இந்நிலையில் விவசாயிகளை சந்திக்க லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை இரண்டாவது முறையாக சந்தித்து பேசினார்.

சரமாரி கேள்விகள்
அவரிடம் நிருபர்கள் சரமாரியான கேள்விகளை எழுப்பினர். அப்போது ஒரு நிருபர் கடந்த 22 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை சந்திக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வராதது ஏன்? என்று கேள்வி எழுப்பினர்.

தம்பிதுரை பதில்
நான் துணை சபாநாயகர், எனது பதவி என்ன குறைச்சலான பதவியா? முதல்வருக்கு இணையான பதவி என்னுடையது என்று காட்டமாக கூறிய தம்பிதுரை சற்று சுதாரித்துக் கொண்டு, விவசாயிகள் போராட்டத்தை கைவிடுமாறு வேண்டுகோள் விடுக்குமாறு என்னை அனுப்பி வைத்ததே முதல்வர்தான் என்று தெரிவித்தார்.

பன்னீருக்கு எதிரான குரல்
ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக இருந்தபோது அவரை முதல்வராகவே மதிக்காமல் ஜல்லிக்கட்டு பிரச்சினையில் ஓபிஎஸ்ஸுக்கு போட்டியாக தம்பிதுரை தலைமையில் பிரதமர் மோடியை சந்தித்து மனு அளித்தனர். ஆட்சியும், கட்சியும் ஒருவரிடமே இருக்க வேண்டும். அது சசிகலாவிடம்தான் இருக்க வேண்டும் என்று அவ்வப்போது சொல்லிய தம்பிதுரை, முதல்வர் பதவியை ஓபிஎஸ் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கூறியவர்.

எடப்பாடிக்கு எதிராக
இந்த நிலையில் டெல்லியில் எடப்பாடி பழனிச்சாமியின் பதவி குறித்து தம்பிதுரை கருத்து கூறியதை வைத்து பார்த்தால், எடப்பாடியை மட்டம் தட்டுவதாக உள்ளது. ஒருவேளை தினகரன் ஜெயித்து விட்டால் (ஒருவேளைதான்..) இதே தம்பித்துரையின் வாயால் எடப்பாடிக்கும் வேட்டு வைக்க தினகரன் தரப்பு திட்டமிட்டுள்ளதாகவும் பார்க்கப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications