நாகாலாந்து விவகாரம்: புகழ்பெற்ற ஹார்ன்பில் திருவிழா கொண்டாட்டங்கள் அடியோடு ரத்து!
கோஹிமா: நாகாலாந்து மாநிலத்தில் 14 அப்பாவி நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட நிலையில் தலைநகர் கோஹிமா அருகே நடைபெற்று வந்த புகழ்பெற்ற ஹார்ன்பில் திருவிழா கொண்டாட்டங்கள் ஒட்டுமொத்தமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
நாகாலாந்து மாநிலம் பழங்குடிகளின் தேசம். நாகா இனத்தைச் சேர்ந்த பழங்குடி மக்கள் பல்வேறு மொழிகளைப் பேசக் கூடியவர்கள்.
மனித தலைகளை வெட்டி எடுத்து வீரத்தை வெளிப்படுத்துகிற கோன்யாக் பழங்குடிகளும் நாகா இனத்தவரே. கோன்யாக் பழங்குடிகளின் வீடுகளில் மனித மண்டை ஓடுகள் நிறைந்து காணப்படும். இது அந்த வீட்டுத் தலைவரின் வீரத்தை பறைசாற்றக் கூடியதாக கொண்டாடப்பட்டது.

ஹார்ன்பில் திருவிழா
நாகாலாந்து மாநில பழங்குடிகளின் கலாசார திருவிழாக்களில் ஒன்றான ஹார்ன்பில் திருவிழா கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் டிசம்பர் முதல் வாரத்தில் இந்த திருவிழா நடைபெறும். கடந்த 2000-ம் ஆண்டு முதல் ஹார்ன்பில் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஹார்ன்பில் திருவிழாவானது அண்மையில் நாகா பழங்குடி இனமக்களின் போற்றுதலுக்குரிய பண்டிகையாக மாறிவிட்டது.

திருவிழா முக்கிய அம்சங்கள்
நாகா இனத்தைச் சேர்ந்த ஒவ்வொரு பழங்குடி இனப் பிரிவினரும் தங்களது ஆடல், பாடல், விளையாட்டு என கலாசாரத்தை வெளிப்படுத்தும் மிக மிக வண்ணமயமான திருவிழா இது. இப்படித்தான் இந்த ஆண்டும் ஹார்ன்பில் திருவிழா டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்கி உற்சாகமோடு நடைபெற்று வந்தது.

பழங்குடிகள் படுகொலை
ஆனால் கோன்யாக் பழங்குடிகளின் தாய்நிலமான மோன் மாவட்டத்தில் ராணுவத்தினரால் 14 அப்பாவிகள் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஹார்ன்பில் திருவிழா கேள்விக்குறியானது. முதலில் ஹார்ன்பில் திருவிழாவில் இருந்து விலகிக் கொள்வதாக சில பழங்குடி அமைப்புகள் அறிவித்தன. இதனைத் தொடர்ந்து ஒட்டுமொத்தமாகவே நடப்பாண்டி ஹார்ன்பில் திருவிழா ரத்து செய்யப்பட்டுவிட்டது. இந்த ஆண்டு ஹார்ன்பில் திருவிழா சோகத்துடன் பாதியிலேயே முடிவடைந்து போய்விட்டது.

புறக்கணித்தது ஏன்?
இது தொடர்பாக கருத்து தெரிவித்த பழங்குடி அமைப்பு தலைவர்கள், எங்கள் பிள்ளைகளை இந்திய ராணுவம் சுட்டுப் படுகொலை செய்து ரத்த வெள்ளத்தில் மிதக்கவிட்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் நாங்கள் ஆடிப் பாடி மகிழ்ந்து கொண்டிருக்கத்தான் முடியுமா? ஆகையால்தான் இந்த திருவிழாவைப் புறக்கணிக்கிறோம் என குமுறலை வெளிப்பாடுத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications