ஒடிஷா: சிவன் கோவிலை சுத்தம் செய்து நந்தியை ஆரத்தழுவி வணங்கிய பாஜக ஜனாதிபதி வேட்பாளர் திரெளபதி முர்மு!
புவனேஸ்வர்: மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஒடிஷா பழங்குடி இன தலைவர் திரெளபதி முர்மு இன்று சிவாலயத்தை சுத்தம் செய்து வழிபாடு நடத்தினார்.
Recommended Video
நாட்டின் புதிய ஜனாதிபதி தேர்தல் ஜூலை 18-ந் தேதி நடைபெற உள்ளது. ஜனாதிபதி தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 21-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக ஒடிஷாவை சேர்ந்த பழங்குடி இனத் தலைவர் திரெளபதி முர்மு அறிவிக்கப்பட்டார்.
பழங்குடி இன தலைவரான திரெளபதி முர்மு, ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை ஒடிஷா மாநிலம் கொண்டாடி மகிழ்கிறது. ஒடிஷா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று இரவே திரெளபதி முர்முவுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். ஜனாதிபதி தேர்தலில் நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளம் முழுமையாக திரெளபதி முர்முவையே ஆதரிக்கும்.
ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட திரெளபதி முர்முவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு கொடுத்துள்ளது மத்திய அரசு. இந்நிலையில் இன்று காலை ஒடிஷாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள தமது சொந்த ஊரான ராய்ரங்பூர் சிவாலயத்துக்கு சென்றார் திரெளபதி முர்மு. அங்கு சிவாலயத்தை கூட்டி சுத்தம் செய்தார். பின்னர் கைகளை கழுவிவிட்டு அங்கிருந்த நந்தியை ஆரத்தழுவி வழிபாடு நடத்தினார். அதேபோல் ஜகந்நாதர், ஹனுமான் ஆலயங்களுக்கும் திரெளபதிர் முர்மு சென்று வழிபாடு நடத்தினார். ராய்ரங்பூரில் உள்ள பிரம்மகுமாரிகள் இல்லத்துக்கும் திரெளபதி முர்மு சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications