ஆண்டுதோறும் காணாமல் போகும் 4000 குழந்தைகள்.. மேற்கு வங்கத்தில் நடப்பது என்ன? ஆசிரியரின் நேரடி அனுபவம்
கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் மட்டும் ஆண்டுக்கு நான்காயிரம் குழந்தைகள் காணாமல் போவதாகத் தெரியவந்துள்ளது.
இந்திய அளவில் மேற்கு வங்காளம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் அதிக அளவில் மைனர் பெண்கள் காணாமல் போவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. காணாமல் போகும் குழந்தைகளில் 60 சதவீதம் பேர் இந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
குழந்தைக் கடத்தலிலும் மேற்கு வங்காளமே முதலிடத்தில் உள்ளது. 2010-ல் கடத்தப்பட்டோர் எண்ணிக்கை 332 ஆக இருந்தது. இது அடுத்த ஐந்து ஆண்டுகளில் 2351 ஆக அதிகரித்துள்ளது. கடத்தப்பட்ட குழந்தைகளில் 61 சதவீதம் பேர் சிறுமிகள் என்பது அதிர்ச்சியளிக்கிறது.
2010-14 காலகட்டத்தில் நாடுமுழுவதும் 3.85 லட்சம் குழந்தைகள் காணாமல் போனார்கள். இவர்களில் 61 சதவீதம் பேர் சிறுமிகள். கடந்த ஆண்டுகளில் இதன் எண்ணிக்கை 60 சதவீதம் அதிகரித்துள்ளது. மேற்கு வங்காளத்தில் காணாமல் போன சிறார்களில் 70 சதவீதம் பேர் சிறுமிகள் என்று புள்ளிவிவரம் கூறுகிறது.

வங்கதேச எல்லை
காணாமல் போவோரில் 40 சதவீதம் பேர் கண்டுபிடிக்கப்படாமலேயே போவதாக தெரியவருகிறது. மேற்கு வங்க மாநிலம் , வங்காள தேச எல்லையிலுள்ள நாடியா மாவட்டத்தில் மட்டும், 2017 ஆம் ஆண்டில் காணாமல் போன 291 குழந்தைகள் அறிக்கையிலிருந்து 2018 ல் 474 ஆக அதிகரித்துள்ளது. வங்காளத்தில் மட்டும் அதிக அளவில் குழந்தைகள் காணாமல் போவது நடந்து வருகிறது. அதிலும் குறிப்பாக பெண் குழந்தைகள் காணாமல் போய், திரும்ப வராமல் இருப்பதும் தொடர்கதையாகி வருகிறது.

ஆசிரியரின் டைரிக்குறிப்பு
'Field Notes from a Waterborne Land' என்ற நூலை பரிமளா பட்டாச்சாரியா எனும் ஆசிரியை எழுதி இருக்கிறார். அதில், கொல்கத்தா நகரை சுற்றி தான் சந்தித்த குழந்தைகள், கல்வி சூழல், காணாமல் போகும் பெண்கள் குறித்தும் தன்னுடைய அனுபவங்களை எழுதி இருக்கிறார். அந்த புத்தகத்தில், கங்கையில் ஏற்பட்ட வெள்ளத்தால், ஹரிஷ்பூர் பாலிகா வித்யாலயா பள்ளியில் பல குடும்பங்கள் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

கங்கை வெள்ளம்
ஒரு புறம் பள்ளி நடந்துகொண்டிருந்தது. மறுபுறம் பள்ளிக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த இவர்கள் சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.அன்று பள்ளிக்கு பல பெண்கள் வரவில்லை. இதுகுறித்து அங்கிருந்த ஆசிரியர்களுடன் பேசினேன். கங்கையில் ஏற்படும் வெள்ளம் இவர்களது வாழ்க்கையை புரட்டிப்போடுகிறது. வெள்ளத்தில் இருந்து காப்பாற்றப்படும் மக்கள் இதுபோன்ற பள்ளிகளில் தஞ்சமடைகிறார்கள்.

காணாமல் போகும் குழந்தைகள்
கங்கையில் ஏற்படும் வெள்ளம், வங்காளத்தில் வண்டல்மண் பகுதிகளை வாரி சுருட்டிச் செல்கிறது. இதில் பலர் காணாமல் போகிறார்கள். வெள்ளத்தில் பெரும்பாலும் குழந்தைகளை காணாமல் போவது தொடர்ந்து நடக்கிறது. ''போனவாரம் வந்திருந்தா இன்னும் சிலர பாத்திருக்கலாம்'' என பள்ளி நிர்வாகி சொல்ல எனக்கு அதிர்ச்சியாக இருந்தது என்கிறார் ஆசிரியர் பரிமளா.
வெள்ளம், கடத்தல், வறுமையால் சொந்த ஊரைவிட்டு வெளியேறுதல் என மேற்கு வங்கத்தில் மட்டும் சுமார் நான்காயிரம் பேர் காணாமல் போவதாக தெரிவித்துள்ளார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications