பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டப்படும்.. சந்திரபாபு நாயுடு அறிவிப்பால் தமிழக விவசாயிகள் ஷாக்
அமராவதி: பாலாற்றில் புதிய அணை கட்டப்படும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளர். குப்பம் தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர், ஊருக்கே தண்ணீர் தர வேண்டியது என் பொறுப்பு. பாலாற்றின் குறுக்கே மாதவப்பள்ளி, யாதவப்பள்ளியில் புதிய தடுப்பணை கட்டப்படும் என்று தெரிவித்துள்ளார். இது தமிழக விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவில் லோக்சபா தேர்தலுடன் அம்மாநில சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தம் உள்ள 175 தொகுதிகளில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களில் வென்றது. தெலுங்கு தேசம் கட்சியின் கூட்டணியில் இருந்த பவன் கல்யாணின் ஜனசேனா 21 இடங்களிலும் பாஜக 8 இடத்திலும் வெற்றி பெற்றது.

சந்திரபாபு நாயுடு பேச்சு: ஆளும் கட்சியாக இருந்த ஜெகன் மோகன் ரெட்டி கட்சி படு தோல்வியை சந்தித்தது. எதிர்க்கட்சி அந்தஸ்து கூட அந்த கட்சிக்கு கிடைக்கவில்லை. ஆந்திராவில் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை சந்திரபாபு நாயுடு மேற்கொண்டு வருகிறார். மாநிலம் முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் சந்திரபாபு நாயுடு, மக்களிடையே உரையாற்றியும் வருகிறார்.
இந்த நிலையில், தனது சொந்த தொகுதியான குப்பம் பகுதியில் சந்திரபாபு நாயுடு பேசினார். அப்போது சந்திரபாபு நாயுடு கூறியதாவது:- 8 வது முறையாக என்னை தேர்வு செய்தற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். என்னை தேர்வு செய்தற்கு கைமாறாக இந்த தொகுதியின் வளர்ச்சிக்காக பல்வேறு நலத்திட்டங்களை செய்ய இருக்கிறேன்.
புதிய தடுப்பணை கட்டப்படும்: ஆந்திர மாநிலத்தை கஞ்சா போன்ற போதை பொருள் இல்லாத மாநிலமாக மாற்றுவேன். படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவேன். பாலாற்றின் குறுக்கே மாதவப்பள்ளி, யாதவப்பள்ளியில் புதிய தடுப்பணை கட்டப்படும். ஊருக்கே தண்ணீர் தர வேண்டியது என் பொறுப்பு ஆகும். அதனை பொன்னாக மாற்றுவது உங்கள் பொறுப்பு" என்றார்.
பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டினால் தமிழகத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதால் தமிழக விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 2005 ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சி காலத்தின் போது, பாலாற்றின் குறுக்கே சந்திரபாபு நாயுடு தடுப்பணை கட்ட முயற்சி செய்தார். இதற்கு ஜெயலலிதா, உச்ச நீதிமன்றத்தை நாடி தடை உத்தரவு பெற்றார்.
20 க்கும் மேற்பட்ட தடுப்பணைகள்: அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும் என சந்திரபாபு நாயுடு அறிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலாற்றில் ஏற்கனவே 20 க்கும் மேற்பட்ட சிறிய தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. பாலாற்றின் கிளை ஆற்றிலும் தடுப்பணைகளை ஆந்திர மாநில அரசு கட்டி வைத்துள்ளது.
முன்னதாக கடந்த ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில், பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட ஆந்திர அரசு ரூ.215 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவித்தார். ஆந்திர அரசின் நடவடிக்கை உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என்று தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இத்தகைய சூழலில் தான் மீண்டும் பாலாறு விவகாரம் பேசுபொருளாகியுள்ளது.
நந்திமலையில் உருவாகும் பாலாறு: கர்நாடகாவில் உள்ள நந்திமலையில் உருவாகும் பாலாறு தமிழகத்தில் 222 கி.மீ ஓடி வயலூர் அருகே வங்கக் கடலில் கலக்கிறது. இந்த ஆறு கர்நாடகாவில் 90 கி.மீட்டரும், ஆந்திர மாநிலத்தில் 45 கி.மீ., தொலைவுக்கும் பயணிக்கிறது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் மட்டும் 127 கி. மீட்டர் தொலைவுக்கு பாலாறு செல்கிறது.
பாலாற்றில் ஆந்திரா கட்டியுள்ள தடுப்பணைகளால் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் கிடைக்க வில்லை. இதனால், பாலாற்று நீரை நம்பியுள்ள விவசாயிகள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர். இந்த சூழலில் தற்போது, பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டப்படும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியதற்கு, தமிழகத்தில் இருந்து எதிர்ப்பு கிளம்ப வாய்ப்பு இருக்கிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications