அடுத்த ஜனாதிபதி யார்? எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் ஆலோசனை
இந்தியாவின் அடுத்த ஜனாதிபதி யார் என்பது குறித்து முடிவு செய்யும் தேர்தல் அடுத்த மாதம் 17ம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் டெல்லியில் ஆலோசனை நடத்துகின்றன.
டெல்லி: பாஜகவுக்கு சரியான எதிர்ப்பைக் காட்டும் வகையில், சோனியா காந்தி தலைமையில் நாடாளுமன்றத்தில் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவின் அடுத்த ஜனாதிபதி யார் என்பதை முடிவு செய்யும் வகையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் நாடாளுமன்றத்தில் கூடி ஆலோசனை செய்து வருகின்றனர். வருகிற ஜூலை மாதம் 17ம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், இன்று முதல் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு செய்வதில் பரபரப்பாக ஈடுபட்டுள்ளன.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூட்டியுள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில், திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் ஆகியவற்றின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
எதிர்க்கட்சிகள் ஆலோசனையில் ஈடுபடுவதற்கு முன்பாக, பாஜக தலைமை ஜனாதிபதியை போட்டியின்றித் தேர்வு செய்ய சோனியா காந்தியை நேரில் சந்திக்க முடிவு செய்திருந்தது. இந்த நிலையில் சோனியா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதனால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பிலும் ஜனாதிபதி வேட்பாளர் நிறுத்தப்படுவது உறுதியாகியுள்ளதாகத் தெரிகிறது. இதனையடுத்து ஜனாதிபதி தேர்தலில் கடும் போட்டி நிலவும் என்று டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications