முதல்வர் பதவியை ராஜினமா செய்ததற்காக மன்னிப்பு கேட்கிறேன்: "கேஜ்ரிவால்" பாணியில் நிதிஷ்
பாட்னா: பீகார் முதல்வர் பதவியில் இருந்து பதவி விலகியதற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் என்று ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் நிதிஷ்குமார் கூறியுள்ளார்.
பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் ஆட்சியில் இருந்தது. லோக்சபா தேர்தலில் அக்கட்சி பீகாரில் 2 தொகுதிகளைக் கைப்பற்றி தோல்வி அடைந்ததால் முதல்வர் பதவியில் இருந்து நிதிஷ்குமார் ராஜினாமா செய்தார்.

பின்னர் ஐக்கிய ஜனதா தளத்தின் மஞ்சியை முதல்வராக்கினார் நிதிஷ். ஆனால் மஞ்சியோ நிதிஷுக்கு எதிராக கலகக் கொடி தூக்கினார். அவரை நீக்கிவிட்டு மீண்டும் முதல்வராகவும் நிதிஷ்குமார் மேற்கொண்ட முயற்சியும் தோல்வி அடைந்தது.
இந்நிலையில் இன்று சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு சற்று முன்னர் முதல்வர் பதவியை மஞ்சி திடீரென ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து பாட்னாவில் செய்தியாளர்களிடம் நிதிஷ்குமார் கூறியதாவது:
நான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தது தவறுதான். இனி உணர்ச்சிவசப்பட்டு இதுபோன்ற முடிவுகளை எடுக்கமாட்டேன். இனி எப்போதும் மக்கள் நலனைத்தான் கவனத்தில் கொள்வேன். நாம் பீகாரின் வளர்ச்சிக்காக இணைந்து செயல்பட வேண்டும்.
நான் முதல்வர் பதவியை தவறுதலாக ராஜினாமா செய்துவிட்டேன். பீகாரில் ஆட்சி அமைக்க ஏற்கெனவே உரிமை கோரி இருக்கிறேன். தற்போதும் ஆளுநரின் அழைப்புக்காக காத்திருக்கிறேன்.
மஞ்சியை முன்வைத்து பாரதிய ஜனதா நாடகம் நடத்திப் பார்த்தது. நான் ஒருபோதும் மஞ்சி அரசில் தலையிட்டதே கிடையாது. கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் தம் மீது நடவடிக்கை வராத வகையில் அனைத்து முயற்சிகளையும் மஞ்சி மேற்கொண்டுப் பார்த்தார்.. ஆனால் அது நீடிக்கவில்லை.
இவ்வாறு நிதிஷ்குமார் கூறினார்.
கேஜ்ரிவால் பாணி..
டெல்லியில் 49 நாள் ஆட்சி நடத்திய ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால், சட்டசபை தேர்தலின் போது அவசரப்பட்டு முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டேன்.. மன்னித்துவிடுங்கள் என்று பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார். தற்போது அதே பாணியை நிதிஷ்குமாரும் பின்பற்றுவது குறிப்பிடத்தக்கது.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications