ஜம்மு காஷ்மீரில் ஜனநாயகம் நடைமுறையில் இல்லை... குலாம்நபி ஆசாத் குமுறல்
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ஜனநாயகம் நடைமுறையில் இல்லை என மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம்நபி ஆசாத் குற்றம்சாட்டியுள்ளார்.
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவு நீக்கப்பட்ட பின்னர் அம்மாநிலத்துக்கு செல்ல குலாம்நபி ஆசாத் முயற்சித்தார். ஆனால் ஶ்ரீநகர் விமான நிலையத்திலேயே அவர் தடுத்து நிறுத்தப்பட்டு 3 முறை திருப்பி அனுப்பப்பட்டார்.

இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் முறையிட்டார் குலாம்நபி ஆசாத். இதனை ஏற்று குலாம்நபி ஆசாத் ஜம்மு காஷ்மீர் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. அங்கு சென்று பார்வையிட்ட பின்னர் குலாம்நபி ஆசாத் கூறியதாவது:
ஜம்மு காஷ்மீர் மக்கள் மிகவும் துயரத்தில் இருக்கின்றனர். 370-வது பிரிவு நீக்கம், மாநிலத்தையே 2 ஆக பிரித்தது ஆகியவை மக்களை மிகக் கடுமையாக பாதித்திருக்கிறது.
மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் 100 அல்லது 200 பேர் மட்டும்தான் மகிழ்ச்சியில் உள்ளனர். ஜம்மு காஷ்மீரில் மகிழ்ச்சி தொலைந்துவிட்டது.
ஜம்மு காஷ்மீரில் ஜனநாயகம் என்பது நடைமுறையில் இல்லை. நான் என் வாழ்க்கையில் இதுபோன்ற ஒரு கடும்போக்கு கொண்ட நிர்வாக அமைப்பை பார்த்தது இல்லை. ஜம்மு காஷ்மீரில் ஜனநாயகம் வேரறுக்கப்பட்டுவிட்டது.
அம்மாநிலத்தில் கருத்து சுதந்திரம் என்பது நசுக்கப்பட்டிருக்கிறது. மக்களினது போராடுகின்ற உரிமை ஒடுக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு கபில் சிபல் கூறினார்.
-
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications