ப்பாடா.. கேரளாவில் குறைந்தது மழை.. ரெட் அலர்ட் இல்லை.. மக்களுக்கு சின்ன நிம்மதி!
திருவனந்தபுரம்: கேரளத்தில் மழை குறைந்ததால் ரெட் அலர்ட்டை வானிலை மையம் திரும்ப பெற்றுக் கொண்டது. இது மக்களுக்கு சின்ன நிம்மதியை அளித்துள்ளது.
கடந்த ஒரு மாதமாக கேரளத்தில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு மழை பெய்தது. இதனால் 300-க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர்.
3 லட்சம் பேர் வீடுகளை இழந்தனர். மேலும் மாநிலத்தில் 19,512 கோடி சேதம் அடைந்துள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

பினராயி விஜயன்
மழைால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார். அப்போது முதல் கட்டமாக மாநிலத்துக்கு ரூ.500 கோடி ஒதுக்குவதாக மோடி அறிவித்தார். எனினும் கேரளா முதல்வர் பினராயி விஜயன் கேட்டதோ ரூ. 2000 கோடி ஆகும்.

ரெட் அலர்ட்
58 தேசிய பேரிடர் மீட்பு படையினர் மாநிலத்தில் உள்ள 8 மாவட்டங்களிலும் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீட்பு பணிகளையும் அவசர மருத்துவ உதவி அளிக்கும் பணிகளையும் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றைய தினம் திருவனந்தபுரம், கொல்லம், காசர்கோடு ஆகிய மாவட்டங்களை தவிர இதர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது.

மக்கள் அச்சம்
மேலும் மழை கொட்டி தீர்க்கும் என்ற வதந்தியால் மக்கள் அச்சமடைந்தனர். இதையடுத்து நேற்று சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட ரெட் அலர்ட்டை வானிலை ஆய்வு மையம் திரும்ப பெற்றுக் கொண்டது.

மஞ்சள் அலர்ட்
எனினும் 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இரு மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் பிறப்பிக்கப்பட்டது. எனினும் பத்தினம்திட்டா, இடுக்கி மற்றும் எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மழை வரும் 20-ஆம் தேதி வரை நீடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications