நாடு எங்கே போகுது? பகலில் வங்கி அதிகாரி.. இரவில் கொள்ளையன்! பெங்களூர் போலீசிடம் சிக்கிய பலே நபர்கள்
பெங்களூர்: பகலில் டிப்-டாப் அதிகாரிகளாகவும், இரவில் வழிப்பறி கொள்ளைக்காரர்களாகவும் அவதாரம் எடுத்த 4 பேரை பெங்களூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூர் விவேக்நகர் போலீசார் ரோந்து சென்றபோது, ஸ்ரீநிவாகிலு பகுதி இன்னர்-ரிங் ரோடு பகுதியில் சிலர் சந்தேகத்திற்கிடமாக நிற்பதை பார்த்து விசாரித்தனர். அப்போது அவர்கள் வழிப்பறி கொள்ளையர்கள் என்பதும், ஆயுதங்களை காண்பித்து, சாலையில் நடந்து செல்வோரிடம் வழிப்பறி செய்ய பதுங்கியிருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்ய முற்பட்டபோது ஒரு நபர் தப்பியோடிவிட்டார். நான்குபேர் சிக்கினர். அவர்களிடமிருந்து மிளகாய் பொடி, அரிவாள் போன்ற கொள்ளைக்கு பயன்படுத்தும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட நபர்கள் எட்வின் பவுல் ராஜ் (21), கிளிண்டன் சேப்பல் (21), ஜோஷி பாஸ்கர் (21), தினேஷ் பென்சலையா (21), என தெரியவந்தது. இவர்கள் அனைவரும், விவேக்நகர், ஈஜிபுரா பகுதியை சேர்ந்தவர்கள்.
இதில் தினேஷ் பென்சலையா பெங்களூர், எம்.ஜி.ரோட்டிலுள்ள, பன்னாட்டு வங்கி ஒன்றில் பணியாற்றுகிறார். கிளிண்டன், எலக்ட்ரிஷியன் வேலை பார்ப்பவர். ஜோஷி பாஸ்கர், ஒரு பிரபல உணவக நிறுவனத்தில் அதிகாரியாக உள்ளவர். இவர்கள் அனைவரும் பகல் நேரத்தில், டிப்-டாப்பாக
உடை அணிந்து, ஷூ போட்டு பணிக்கு செல்வதும், இரவில், பொதுமக்களிடம் கொள்ளையடிப்பதும் வழக்கமாக கொண்டவர்கள் என தெரியவந்துள்ளது.
நிறைய பணம் சம்பாதித்து உல்லாச வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எண்ணமே இவர்களை இப்படி செய்ய தூண்டியுள்ளது. ஆனால் தற்போது உள்ள வேலையும் போய் சிறையில் கம்பி எண்ணுகிறார்கள்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், குற்றவாளிகளை பணிக்கு வைத்திருந்த நிறுவனங்கள், இவர்களின் பின்புலத்தை உறுதி செய்ததா என்பதை விசாரிப்போம். அதில் மெத்தனம் இருப்பது தெரியவந்தால் அந்த நிறுவனங்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும் என்று தெரிவித்தனர்.
-
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
மத்திய அரசின் புதிய சேவை.. உங்கள் பணம், உங்கள் கையில்.. இனி ஒரு ரூபாய் கூட மிஸ் ஆகாது! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications