மக்களுடன் தொடர்பே இல்லை, பிறகு எப்படிங்க ஜெயிக்க முடியும்... பவார் மகள்
மும்பை: லோக்சபா தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு மக்களுடன் தொடர்பே இல்லாமல் போன காரணத்தால்தான் தோல்வியைச் சந்திக்க நேரிட்டதாக அக்கட்சித் தலைவர் சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே கூறியுள்ளார்.
சுப்ரியா, பாராமதி தொகுதியிலிருந்து வெற்றி பெற்றுள்ளார். ஆனால அவரது கட்சி தேர்தலில் படு தோல்வியைச் சந்தித்தது.
இதுகுறித்து அவர் கூறுகையில், மக்களுடன் தொடர்பு இல்லாமல் போனதே தோல்விக்கு முக்கியக் காரணம். மக்களிடமிருந்து எங்களுக்கு நிறைய புகார்கள் வருகின்றன. அவர்களின் கருத்துக்கள், எண்ணங்கள் வந்த வண்ணம் உள்ளன.

கடந்த முறை நான் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்தேன். இந்த முறை 70,000 வாக்குகள் வித்தியாசம்தான் வந்துள்ளது.
எல்லாமே சரியில்லை. நாம் யோசித்துப் பார்க்க வேண்டும். மக்களை சென்றடைவது எப்படி என்பதை யோசிக்க வேண்டும் என்றார் அவர்.
தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு மகாராஷ்டிராவில் 4 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது. காங்கிரஸ் கட்சிக்கோ 2 இடங்கள்தான் கிடைத்தன. சிவசேனா பாஜக கூட்டணி இங்கு 42 இடங்களை வென்றது. மொத்தம் 48 இடங்கள் உள்ளன.
வரும் அக்டோபர் மாதம் மகாராஷ்டிராவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இப்போது கிடைத்துள்ள தோல்வியால் காங்கிரஸும், தேசியவாத காங்கிரஸும் கடும் கவலையில் மூழ்கியுள்ளன.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications