பன்றிக்காய்ச்சல் பலி 1,239 ஆக உயர்வு; 2 அதிகாரிகள் டிரான்ஸ்பர்
டெல்லி: பன்றிக் காய்ச்சலுக்கு மேலும் 41 பேர் பலியானதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் பன்றிக் காய்ச்சல் தாக்குதலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 239 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதேபோல், 23 ஆயிரம் பேருக்கு பன்றிக் காய்ச்சல் நோய் இருப்பதற்கான அறிகுறி உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பன்றிக்காய்ச்சல் குறித்த செய்திகள் ஊடகங்கள் வெளியாக காரணமாக இருந்ததாக கூறி இரண்டு அதிகாரிகளை சுகாதாரத்துறை டிரான்ஸ்பர் செய்துள்ளது.
ஹெச்1 என்1 என்ற வைரஸ் மூலம் உலகின் பல நாடுகளின் வழியாக பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் இந்த நோய் இந்தியாவின் வட மாநிலங்களில் தற்போது வேகமாக பரவி வருகின்றது. இந்நோயின் தாக்கம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியிருப்பதாவது:
23,153 பேர் பாதிப்பு
இந்தியாவில் பன்றிக்காய்ச்சலுக்கு நேற்று வரை 1,239 பேர் பலியாகி இருக்கிறார்கள். 23,153 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
குஜராத்தில் 302 பேர் பலி
குஜராத் மாநிலத்தில் அதிகபட்சமாக 302 பேர் பலியாகி உள்ளன. ராஜஸ்தானில் 295 பேரும், மத்திய பிரதேசத்தில் 174 பேர் பலியாகியுள்ளனர்.
மகாராஷ்டிரா
மகாராஷ்டிராவில் 178, தெங்லுங்கானாவில் 60, பஞ்சாபில் 47, கர்நாடகாவில் 52, ஹரியானாவில் 25, உத்திர பிரதேசத்தில் 16, ஆந்திராவில் 14, ஹிமாச்சல பிரதேசத்தில் 8, ஜம்மு-காஷ்மீரில் 10 பேர்களும் பலியாகி இருக்கிறார்கள்.
தலைநகர் டெல்லியில் இதுவரை 10 பேர் பன்றிக் காய்ச்சல் நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். சுமார் 3 ஆயிரத்து 200 பேருக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
வெப்பத்திற்கு கிருமிகள் பலி
அதிக வெப்பம் பதிவாகும் பகுதிகளில் இந்த நோயை பரப்பும் கிருமிகள் குறைந்து வருகிறது.நோயை கட்டுப்படுத்த கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதிகாரிகள் டிரான்ஸ்பர்
இதனிடையே, பன்றிக் காய்ச்சல் நோய் தொடர்பான செய்திகள் ஊடகங்களில் தொடர்ந்து வெளியாவதால், அதிருப்தியடைந்த டெல்லி சுகாதாரத்துறை இயக்குனரகம், 2 அதிகாரிகளை மாற்றியுள்ளது.
தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல்
தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் தாக்கி இதுவரை 10க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள நிலையில் பன்றிக்காய்ச்சல் நோயானது தமிழகத்தில் முழுமையாக கட்டுக்குள் உள்ளதாக தமிழக அரசின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
319 பேர் பாதிப்பு
இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் இதுவரை 319 பேர் பன்றிக்காய்ச்சல் தாக்குதலுக்கு உள்ளானதாகவும், அதில் 183 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பிவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
தடுப்பூசி போடுங்க
மேலும், பன்றிக்காய்ச்சலை குணப்படுத்துவதற்கான டாமிபுளு மாத்திரைகள் போதிய அளவில் கையிருப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள்,மற்றும் மருத்துவர்களுக்கு பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்க முறையாக தடுப்பூசி போடப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications