Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒடிசாவில் மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் 100 பேர் போலீசில் சரண்

ஒடிசா மாநிலத்தில் 100-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் போலீசில் சரணடைந்தனர்.

Subscribe to Oneindia Tamil

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் 100-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் மால்கங்கிரி எஸ்.பி. முன்னிலையில் சரண் அடைந்தனர்.

ஒடிசா அரசுக்கு மாவோயிஸ்டுகள் பெரும் தலைவலியை ஏற்படுத்தி வந்த நிலையில், அவர்களை சரணடையுமாறும், அவ்வாறு சரணடைந்தால், மன்னிப்பு அளிக்கப்படும் என்றும் அம்மாநில அரசு அறிவித்திருந்தது.

Over 100 Maoist supporters surrender before Malkangiri police

அதன்படி மாவோயிஸ்டுகள் மற்றும் அந்த அமைப்பின் ஆதரவாளர்கள் மனம் திருந்தி சரண் அடைந்தால் மறுவாழ்வு உதவிகள் வழங்கப்படுகின்றன. இதனால், பலர் சரண் அடையத் தொடங்கி உள்ளனர்.

இந்த நிலையில் மால்கங்கிரி மாவட்டம் கலிமேளா காவல் சரகத்திற்கு உட்பட்ட குரப் மற்றும் மாரிகதா ஆகிய கிராமங்களில் வசித்து வந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட் மற்றும் அவர்களினஅ ஆதரவாளர்கள் சனிக்கிழமை சரண் அடைந்துள்ளனர்.

சுமார் 145 பேர் மாவட்ட எஸ்.பி. முன்னிலையில் சரண் அடைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சரண் அடைந்தவர்கள், மாவோயிஸ்ட் இயக்கத்தின் கலிமேளா முகாமில் இணைந்து செயல்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+