For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒடிசாவில் மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் 100 பேர் போலீசில் சரண்

ஒடிசா மாநிலத்தில் 100-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் போலீசில் சரணடைந்தனர்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் 100-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் மால்கங்கிரி எஸ்.பி. முன்னிலையில் சரண் அடைந்தனர்.

ஒடிசா அரசுக்கு மாவோயிஸ்டுகள் பெரும் தலைவலியை ஏற்படுத்தி வந்த நிலையில், அவர்களை சரணடையுமாறும், அவ்வாறு சரணடைந்தால், மன்னிப்பு அளிக்கப்படும் என்றும் அம்மாநில அரசு அறிவித்திருந்தது.

Over 100 Maoist supporters surrender before Malkangiri police

அதன்படி மாவோயிஸ்டுகள் மற்றும் அந்த அமைப்பின் ஆதரவாளர்கள் மனம் திருந்தி சரண் அடைந்தால் மறுவாழ்வு உதவிகள் வழங்கப்படுகின்றன. இதனால், பலர் சரண் அடையத் தொடங்கி உள்ளனர்.

இந்த நிலையில் மால்கங்கிரி மாவட்டம் கலிமேளா காவல் சரகத்திற்கு உட்பட்ட குரப் மற்றும் மாரிகதா ஆகிய கிராமங்களில் வசித்து வந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட் மற்றும் அவர்களினஅ ஆதரவாளர்கள் சனிக்கிழமை சரண் அடைந்துள்ளனர்.

சுமார் 145 பேர் மாவட்ட எஸ்.பி. முன்னிலையில் சரண் அடைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சரண் அடைந்தவர்கள், மாவோயிஸ்ட் இயக்கத்தின் கலிமேளா முகாமில் இணைந்து செயல்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Recent reports from various media sources suggest that over 100 supporters of Maoists have surrendered before the Malkangiri police today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X