இஷ்ரத் ஜஹான் என்கவுண்ட்டர் விவகாரத்தில் பிரமாணப் பத்திரத்தை மாற்றினார் ப.சிதம்பரம்: கிரண் ரிஜிஜூ
டெல்லி: இஷ்ரத் ஜஹான் என்கவுண்ட்டர் விவகாரத்தில் பிரமாணப் பத்திரத்தை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்தான் மாற்றினார் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் கிரண் ரிஜிஜூ நேற்று கூறியதாவது:
எந்தவொரு வழக்கிலும் முதலில் தாக்கல் செய்யப்படும் பிரமாணப் பத்திரத்தில் மாற்றம் செய்ய வேண்டுமெனில், அதற்கு சில அடிப்படையான காரணங்கள் இருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் பிரமாணப் பத்திரத்தை மாற்றக் கூடாது.

ஆனால் இஷ்ரத் ஜஹான் என்கவுன்டர் வழக்கில் அந்த இளம்பெண்ணுக்கு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பிருப்பதாக கூறும் உளவுத் தகவல்களை புறந்தள்ளிவிட்டு, அவருக்கு நற்சான்றிதழ் அளிக்கும் வகையில் முற்றிலும் புதிதாக ஒரு பிரமாணப் பத்திரம் கடந்த 2009ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு முழு முதல் காரணம் அப்போதைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தான்.
இவ்வாறு கிரண் ரிஜிஜூ கூறினார்.












Click it and Unblock the Notifications