ஏர்செல்-மேக்சிஸ் விவகாரத்தில், தெரிந்தே விதிமுறைகளை மீறிய ப.சிதம்பரம்.. சிபிஐ குற்றப்பத்திரிகை
டெல்லி: ஏர்செல்- மேக்சிஸ் முதலீடுக்கான அனுமதி, பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவுக்கு செல்வதை தடுக்க, அப்போது நடைமுறையில் இருந்த விதிமுறைகளை முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் தெரிந்தே மீறியிருப்பதாக சிபிஐயின் குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஆங்கில செய்தித்தாள் ஒன்றில் தகவல் வெளியாகியுள்ளது.
மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை வாங்கியது. இதன் அடிப்படையில் மொத்த முதலீடு சுமார் 3,650 கோடி ரூபாயாக இருந்தது. அப்போது நடைமுறையில் இருந்த அரசு ஆணைப்படி, நிதி அமைச்சரால் 600 கோடி ரூபாய் வரையிலான வெளிநாட்டு முதலீடுகளுக்கு மட்டுமே அனுமதியளிக்கமுடியும். இதற்கு மேல் உள்ள முதலீடுகளுக்கு, பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு அனுமதி தேவை.

ஆனால், ஏர்செல் மேக்சிஸ் விவகாரத்தில் 3,650 கோடி ரூபாய் முதலீடு என்பது மறைக்கப்பட்டு வெறும் 180 கோடி ரூபாய் மட்டுமே முதலீடாக காட்டி அனுமதி அளித்துள்ளதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெரிந்தே, சிதம்பரம் விதிமுறைகளை மீறி ஏர்செல்-மேக்சிஸ் முதலீட்டிற்கு அனுமதியளித்துள்ளதாக சிபிஐ தனது குற்றப்பத்திரிகையில் குற்றம்சாட்டியுள்ளதாக அந்த நாளிதழ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம், இக்குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்திருந்தது நினைவிருக்கலாம்.
ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தத்திற்கு அனுமதியளிக்கப்பட்ட காலகட்டத்தில், வெளிநாட்டு முதலீடு வளர்ச்சி வாரியத்தின் கூடுதல் செயலாளராக இருந்த அசோக் சாவ்லா, இணைச் செயலாளர் சஞ்சய் கிருஷ்ணா, செயலாளர்கள் ராம் ஷரன், மற்றும் தீபக் குமார், அப்போதைய பொருளாதார விவகாரங்கள் துறைச் செயலாளர் அசோக் ஜா உள்ளிட்டோர் சிதம்பரத்துடன் சேர்ந்து சதியில் ஈடுபட்டதாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications