இந்தியாவுக்கு எதிராக பாக். நாடாளுமன்ற தீர்மானம் என்பது “விரக்தியின் வெளிப்பாடு"- பாஜக கண்டனம்
டெல்லி: பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இந்தியாவுக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றியிருப்பது என்பது அந்நாட்டின் விரக்தியின் வெளிப்பாடுதான் என்று பாரதிய ஜனதா கண்டனம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் நாடாளுமன்றத்தில் எல்லை தாக்குதலை முன்வைத்து நேற்று முன் தினம் இந்தியாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது குறித்து பாரதிய ஜனதா தேசிய பொதுச்செயலாளர் ராஜிவ் பிரதாப் ரூடி கூறியுள்ளதாவது:
பாகிஸ்தானின் தீர்மானம் விரக்தியை காட்டுகிறது. பாகிஸ்தான் சமீபத்தில் காஷ்மீர் விவகாரத்தை ஐ. நா. சபையில் எழுப்பியது. ஆனால் இதற்கு எந்த பதிலையும் பாகிஸ்தானால் பெற முடியவில்லை.
காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்சினையாக்கும் பாகிஸ்தானின் முயற்சி தோல்வியில் முடிவடைந்தது. இத்தகைய விரக்தியின் வெளிப்படையான விளவுகள்தான் நாடாளுமன்றத் தீர்மானம்.
இவ்வாறு ராஜிவ் பிரதாப் ரூடி கூறினார்.