சரித்திரம் படைத்தது விட்டல் ருக்மணி கோயில்! முதல் பெண் அர்ச்சகர் பூஜைகளை நடத்தினார்!!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் விட்டல் ருக்மணி கோயிலில் மரபுகளை உடைத்து உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அர்ச்சகராக நியமிக்கப்பட்ட ஊர்மிளா பதே என்ற பெண் பூஜைகளை நடத்தியுள்ளார்.
மகாராஷ்டிராவில் பாந்தர்பூரில் அமைந்துள்ளது விட்டல் ருக்மணி கோயில். இந்த கோயிலுக்கு ஆண்டு தோறும் 2 கோடி பக்தர்களுக்கு மேல் வந்து போகின்றனர். இக்கோவில் வர்காரி இனத்தவரின் குலதெய்வமாக விளங்குகின்றது.

இந்த கோவிலில் அன்றாட பூஜைகள் செய்ய பெண் அர்ச்சர்கர்கள் மற்றும் பிரமாணர் அல்லாத இதர பிரிவினரையும் அனுமதிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் இந்த ஆண்டு ஜனவரி 15ல் தீர்ப்பு வழங்கியது.
இதையடுத்து கோவிலின் அர்ச்சர்கர் பணிக்கு பிரமாணர் அல்லாத ஆண்கள், பெண்கள் என 129 பேர் விண்ணப்பித்தனர். இவர்களில் 16 அர்ச்சர்கர்களை கோவில் நிர்வாகம் தேர்வு செய்தது. இந்த 16 பேரில் இருவர் பெண்கள்.
இவர்களில் ஊர்மிளா பதே என்ற பெண் நேற்று பூஜைகளை நடத்தினார். விட்டல் ருக்மணி கோயிலில் உள்ள அம்மனுக்கு அவர் பூஜைகளை செய்தார். இது குறித்து விட்டல் ருக்மணி கோயில் நிர்வாகத்தின் இயக்குனர் சஞ்சய் தெலி கூறுகையில், கோயிலில் பின்பற்றப்படும் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு எங்ளுடைய பணியை நாங்கள் மேற்கொள்வோம். சமூகத்தின் அனைத்து தரப்பிலிருந்தும் எங்களுக்காக ஒத்துழைப்பு அளித்தவர்களுக்கு நன்றி என்றார்.
900 ஆண்டுகால மரபை உடைத்து பெண் ஒருவர் அர்ச்சகராக பூஜைகளை நடத்தியிருப்பதற்கு சமூக நீதியில் அக்கறை கொண்டோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications