ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100ஐ தொட்டாலே பங்குகளை மூட வேண்டி வரும்.. ஏன் தெரியுமா?
Recommended Video

டெல்லி: பெட்ரோல், டீசல் விலை விஷம்போல மளமளவென தினமும் ஏறிக்கொண்டுள்ளது.
கடந்த பல நாட்களாகவே தினமும் பெட்ரோல், டீசல் விலை சில பைசாக்கள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், மும்பையில் பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ. 90யை இன்று தாண்டியுள்ளது. அங்கு ரூ. 90.08க்கு பெட்ரோல் விற்பனை செய்யப்படுகிறது.
டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 82.27, கொல்கத்தாவில் ரூ. 85.54, சென்னையில் ரூ. 85.99க்கும் விற்பனையாகிறது. டீசலை பொறுத்தளவில் மும்பையில் ரூ. 78.58, டெல்லியில் ரூ. 74.02, கொல்கத்தாவில் ரூ. 75.87, சென்னையில் ரூ. 78.26 என்ற விலையில் விற்பனையாகிறது.

எல்லோருக்கும் கோபம்
இந்த நிலையில், விரைவிலேயே ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்கள் மட்டுமின்றி, பெட்ரோல் பங்க் உரிமையாளர்களும் கடுப்பாகியுள்ளனர்.

மீட்டர் மாற்றம்
பெட்ரோல் போட்டுக்கொள்ளும், பொதுமக்கள் கோபப்படுவது நியாயம், பெட்ரோல் வழங்கும் பங்க் உரிமையாளர்களுக்கு என்ன கஷ்டம் என்று கேட்கிறீர்களா? தற்போது நடைமுறையிலுள்ள பெட்ரோல், டீசல் வினியோக மீட்டர்களை மாற்றியமைக்க வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்படும்.

எத்தனை எண்கள்
மத்திய அரசு அறிவுறுத்தல்படி, இப்போது மீட்டர்கள் செயல்பட்டு வருகின்றன. இப்போதுள்ள மீட்டரில் புள்ளிக்கு இடதுபுறம் இரு எண்கள், வலதுபுறம் இரு எண்கள் இடம்பெற முடியும். ஆனால், லிட்டர் 100ஐ தாண்டினால், மீட்டர்களை மாற்றியமைக்க தேவையுள்ளது.

மீட்டரை மாற்ற வேண்டும்
vபெட்ரோல், அல்லது டீசல் விலை லிட்டருக்கு 99.99 ரூபாய் வரை உயர்ந்தால் அப்போது மீட்டரை மாற்ற தேவை இருக்காது. ஆனால், அதற்கு மேல் விலை ஏறினால் மீட்டரை மாற்ற வேண்டிய தேவை ஏற்படும். அப்போது சில பெட்ரோல் பங்க்குகளை மூட வேண்டிய தேவை ஏற்படலாம். ஏனெனில் மொத்தமாக மீட்டர்களை மாற்றியமைக்க தேவையான நிபுணர்கள் கிடைப்பதில் அப்போது தட்டுப்பாடு ஏற்படும்.
-
தமிழகத்தில் பெட்ரோல் – டீசல் தட்டுப்பாடு.. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பங்குகள் மூடல்.. மக்கள் அவதி -
டீசலுக்கு கூடுதலாக ₹13.5 வரி! பெட்ரோலுக்கும் புதிய வரி.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு! ஏன் முக்கியம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications