மாலத்தீவு விவகாரம்.. மோடி-ட்ரம்ப் போனில் திடீர் ஆலோசனை! அதிரடிக்கு வாய்ப்பு?
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும் மாலத்தீவு விவகாரம் பற்றி தொலைபேசியில் நேற்று மாலை, ஆலோசனை நடத்தியுள்ளனர். இவ்வாண்டில் இவ்விரு தலைவர்களும் போனில் ஆலோசித்தது இதுதான் முதல்முறை என்பது கூடுதல் முக்கியத்துவம்.
மாலத்தீவில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அந்த நாட்டு அதிபர் அப்துல்லா யாமீன், சீனாவுக்கு நெருக்கமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இந்த நிலையில்தான் திடீரென அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு எதிர்க்கட்சியினர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் அதிபர் அபயம்
அதேநேரம், இந்தியாவுக்கு ஆதரவானவராக அறியப்படும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் அதிபர் மொகமது நசீத், தமது நாட்டுக்கு இந்திய தூதர்களையும், ராணுவத்தையும் அனுப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

ட்ரம்புடன் ஆலோசனை
இதுபற்றி இந்தியா இன்னும் ஒரு முடிவையும் எடுக்காத நிலையில், ட்ரம்ப்-மோடி நடுவேயான டெலிபோன் பேச்சின்போது, மாலத்தீவு விவகாரம் பற்றி ஆலோசிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிரடி
மாலத்தீவில் சீனாவின் ஆதிக்கத்தை ஒடுக்க, அமெரிக்க துணையோடு இந்தியா அதிரடியாக ஏதாவது நடவடிக்கை எடுத்து, முன்னாள் அதிபர் மொகமது நசீத்துக்கு ஆதரவான நடவடிக்கையை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பை இந்த ஆலோசனை ஏற்படுத்தியுள்ளது.

பல்வேறு விஷயங்கள்
ஆப்கானிஸ்தானில் நிலைத்தன்மையை கொண்டுவருவது, ரோகிங்யா அகதிகள் பிரச்சினை, வட கொரியாவின் அணு ஆயுத குவிப்பு, இந்தியா-அமெரிக்கா நடுவேயான தொழில் வர்த்தக நிலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை இரு நாட்டு தலைவர்களும் ஆலோசித்துள்ளனர்.
-
ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் நினைத்தால்.. 1 வாரத்தில் 10 அணு ஆயுதங்கள் ரெடியாகும்.. வெளியான பரபர தகவல்! -
அமைதி ஒப்பந்தம் ரெடி.. டிரம்ப் கையெழுத்து போட்டால் ஈரான் போர் முடிவுக்கு வந்துடும்! -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications