ராமேஸ்வரத்தில் அப்துல்கலாம் நினைவிடம்: பிரதமர் மோடி உறுதி
டெல்லி: இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் அப்துல் கலாமின் நினைவிடம் அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் 84வது பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியில் அவரது வெண்கல சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்து மரியாதை செலுத்தினார். இதனையடுத்து டிஆர்ஓவில் அறிவியல் கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார். பின்னர் அப்துல் கலாம் அவர்களை பற்றிய தனது நினைவுகளை கூட்டத்தினரிடையே நினைவு கூர்ந்தார்.
PM paying the floral tributes at the bust of Dr. APJ Abdul Kalam, on his 84th birth anniversary at DRDO Bhawan pic.twitter.com/GMgvnJiqPF
— PIB India (@PIB_India) October 15, 2015
அப்போது பேசிய மோடி. கலாமின் வாழ்க்கை இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டியாக இருக்கும். சொந்த ஊரில் கலாம் அவர்களுக்கு நினைவிடம் கட்ட நிலம் கையெழுக்கப்படுத்தப்பட்டுள்ளது.
இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் அப்துல் கலாமின் நினைவிடம் அமைக்கப்படும். அனைவருக்கும் உத்வேகம் அளிப்பவராக கலாம் திகழ்ந்தார். அவரது கனவை நினைவாக்குவது தேசத்தின் கடமை என்றார்.
PM Shri @narendramodi unveils the bust of Dr. APJ Abdul Kalam at DRDO Bhawan, to mark his 84th birth anniversary pic.twitter.com/xdZqNJKuKt
— PIB India (@PIB_India) October 15, 2015
கலாமின் எண்ணங்களை நடைமுறைப்படுத்துவது சவாலானது. ஆனாலும், அவரது எண்ணங்களை நடைமுறைப்படுத்த நாம் உறுதிபூண வேண்டும். கலாமின் வாழ்க்கை, இளைய தலைமுறைக்கு வழிகாட்டியாக உள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்.