மக்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டியதை ஆதார் நிச்சயம் தரும்... மோடியின் ராஜதந்திர விளக்கம்!
ஆதார் அட்டையின் மிகப்பெரிய பயனே மக்கள் தங்களுக்கு கிடைக்கவேண்டியவற்றை நிச்சயம் பெற்றே தீருவார்கள் என்பதே என்று பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளித்துள்ளார்.
டெல்லி: ஆதார் அட்டையின் மிகப்பெரிய நல்ல விஷயமே மக்கள் தாங்கள் பெற உரித்தான விஷயத்தை நிச்சயம் பெற்றுத் தீருவார்கள் என்பதே என்று பிரதமர் நரேந்திர மோடி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடந்த நுகர்வோர் பாதுகாப்பு குறித்த சர்வதேச மாநாட்டை தொடங்கி வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது : நுகர்வோருக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் புதிய நுகர்வோர் சட்டம் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நுகர்வோரை தவறான வகையில் திசை திருப்பும் விளம்பரங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றார்.

நுகர்வோர்கள் பயனடையும் வகையில் ஜிஎஸ்டி சட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது. நுகர்வோருக்கு இது நீண்ட கால அடிப்படையில் பயன்தரும். தொழில் நிறுவனங்களுக்கு இடையே போட்டி ஏற்படுவதால் பொருட்களின் விலை குறையும். இதன் பலன் நுகர்வோரைச் சென்றடையும் என்றும் கூறினார்.
ஆதார் அட்டை மூலம் மிகப்பெரிய நன்மை ஏற்பட்டு உள்ளது. மக்கள் தாங்க பெற உரிமையுள்ளவற்ற பெற்றுத் தர ஆதார் உதவுகிறது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்திய அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெற ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை மார்ச் 31, 2018 வரை நீட்டித்திருப்பதாக மத்திய அரசு தரப்பு உச்சநீதிமன்றத்தில் நேற்று தான் கூற இருக்கிறது. இத்தகைய சூழலில் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்ற ரீதியில் அது நியாயம் தான் என்றும் பிரதமர் பேசியுள்ளார்.
மொபைல் எண்களுடன் ஆதார் எண்ணை இணைக்கும் உத்தரவை எதிர்த்து உச்சநிதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆதார் எண்ணிற்கு மாற்றாக வேறு ஆதாரத்தை கோரலாமா என்று மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதனிடையே மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தன்னுடைய தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டாலும் பரவாயில்லை ஆதார் எண்ணை இணைக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மக்களின் தனிமனித உரிமைகளில் மத்திய அரசு தலையிடுவதாகவும் மம்தா குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications