தூய்மை நகர பட்டியலில் மாயமான மோடியின் வாரணாசி .. இது ஸ்வச் பாரத் காமெடி!
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் தூய்மை நகரங்களுக்காக நடைபெற்ற போட்டியில் பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசி இடம் பெறாதது சமூக ஆர்வலர்கள் மத்தியில் கேள்வியை எழுப்பியுள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் சமயத்திலிருந்தே பிரதமர் மோடி 'தூய்மை இந்தியா' திட்டத்தை முக்கிய குறிக்கோளாக பரப்புரை செய்து வருகிறார். தேர்தலில் வென்று ஆட்சிக் கட்டிலில் வந்து அமர்ந்த பின்னரும் அதை தீவிரமாக பல இடங்களில் செயல்படுத்தியும் வருகிறார். அதற்காக கோடிக் கணக்கில் நிதியும் செலவிடப்பட்டு வருகிறது.

தூய்மை இந்தியா திட்டத்தை ஊக்கப்படுத்தும் முயற்சியாக நாடு முழுவதிலும் சுத்தமாக உள்ள நகரங்கள் பட்டியல் வெளியிட்டு, பரிசும் வழங்கப்படுகிறது. அதன்படி உத்தரப்பிரதேச மாநிலத்தில் கழிவு நீர் மேலாண்மை, கழிப்பிட வசதி உள்ளிட்ட 20 தகுதிகள் சரியாக அமையும் விதமாக இருக்கும் 'தூய்மையான நகரம்' என்ற போட்டி வைக்கப்பட்டது.
மொத்தம் 10 அம்சங்களை முன்வைத்து இந்த போட்டி நடத்தப்பட்டது. குறிப்பாக, திடக்கழிவு மேலாண்மை, கழிப்பிட வசதி, நகரின் உள்கட்டமைப்பு உள்ளிட்ட அளவுகோல்கள் முக்கியமாக பார்க்கப்பட்டன. அதில், தூய்மைக்காக என்று குறிப்பிடப்பட்ட எந்த தகுதியும் இன்றி பிரதமர் மோடியின் நாடாளுமன்ற தொகுதியான வாரணாசி பின்னுக்கு தள்ளப்பட்டு உள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு தேசிய அளவில் தூய்மை நகரங்கள் என்ற பட்டியலில் 32வது இடத்தை வாரணாசி நகரம் பிடித்திருந்தது. அதற்கு முன்னதாக 2015ம் ஆண்டில் நடத்தப்பட்ட போட்டியில் மொத்தமுள்ள 476 நகரங்கள் பட்டியலில் வாரணாசி 418வது இடத்தை பிடித்திருந்தது.
அதன்பிறகு படிப்படியாக முன்னேற்றம் கண்டாலும் தற்போது பின்னடைவை சந்தித்திருப்பது எதனால் என்று வாரணாசி தொகுதியின் வளர்ச்சி பணியில் உள்ள அதிகாரிகள் மண்டையை பிய்த்துக் கொண்டுள்ளனர். இது ஒருபுறமிருக்க தூய்மை இந்தியா என்று பேசி வரும் மோடி, தனது சொந்த தொகுதியான வாரணாசியில் தூய்மை பற்றி கவனிக்காதது ஏன் என்று சமூக ஆர்வலர்கள், எதிர்கட்சியினர், பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications