50 கோடி பேர் பலன் பெறும் மாபெரும் காப்பீடு திட்டம்.. செப். 25 முதல் அமல்: மோடி அறிவிப்பு
Recommended Video
டெல்லி: வரும் செப்டம்பர் 25-ஆம் தேதி முதல் பிரதமரின் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
இன்று சுதந்திர தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தில் 370 ஆண்டுகள் பழமைவாய்ந்த செங்கோட்டையில் நரேந்திர மோடி கொடியேற்றினார். இதைத் தொடர்ந்து அவர் தனது சுதந்திர உரையை தொடங்கினார்.
ககயான் திட்டம்
அதில் 2022ம் ஆண்டுக்குள் விண்வெளிக்கு இந்தியர்கள் அனுப்பப்படுவார்கள். அதாவது இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளில் இது செயல்படுத்தப்படும். விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதற்காக ககன்யான் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
ககயான் திட்டம்
அதில் 2022ம் ஆண்டுக்குள் விண்வெளிக்கு இந்தியர்கள் அனுப்பப்படுவார்கள். அதாவது இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளில் இது செயல்படுத்தப்படும். விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதற்காக ககன்யான் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
துல்லிய தாக்குதல்
2022ம் ஆண்டுக்குள் விவசாயிகள் வருவாய் இரட்டிப்பாக்கப்படும். விவசாயத்தையும், விஞ்ஞானத்தையும் இணைத்து வெற்றி பெறுவதே இந்த அரசின் நோக்கம். இந்தியாவை எதிர்ப்போருக்கு துல்லிய தாக்குதல் மூலம் பதிலடி கொடுத்துள்ளோம்.
துல்லிய தாக்குதல்
2022ம் ஆண்டுக்குள் விவசாயிகள் வருவாய் இரட்டிப்பாக்கப்படும். விவசாயத்தையும், விஞ்ஞானத்தையும் இணைத்து வெற்றி பெறுவதே இந்த அரசின் நோக்கம். இந்தியாவை எதிர்ப்போருக்கு துல்லிய தாக்குதல் மூலம் பதிலடி கொடுத்துள்ளோம்.
என்ன பெயரில்...
பிரதமரின் மருத்துவ காப்பீடு திட்டம் செப்டம்பர் 25ம் தேதி முதல் செயல்படுத்தப்படும். பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா அபியான் என்ற பெயரில் காப்பீடு வழங்கப்படும்.
என்ன பெயரில்...
பிரதமரின் மருத்துவ காப்பீடு திட்டம் செப்டம்பர் 25ம் தேதி முதல் செயல்படுத்தப்படும். பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா அபியான் என்ற பெயரில் காப்பீடு வழங்கப்படும்.
மெகா திட்டம்
ஏழைகளும் சிறந்த மருத்துவ சேவையை பெற இந்த திட்டம் உதவும். மருத்துவ காப்பீடு திட்டத்தால் 10 கோடி குடும்பங்களை சேர்ந்த 50 கோடி மக்கள் பலன் பெறுவார்கள். மருத்துவ காப்பீடு திட்டத்தில் ரூ.5 லட்சம் வரை சிகிச்சை பெற முடியும் என்றார் பிரதமர் மோடி. மருத்துவ காப்பீடு திட்டம் குறித்து கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இது மெகா திட்டம் என்று குறிப்பிடப்படுகிறது.
மெகா திட்டம்
ஏழைகளும் சிறந்த மருத்துவ சேவையை பெற இந்த திட்டம் உதவும். மருத்துவ காப்பீடு திட்டத்தால் 10 கோடி குடும்பங்களை சேர்ந்த 50 கோடி மக்கள் பலன் பெறுவார்கள். மருத்துவ காப்பீடு திட்டத்தில் ரூ.5 லட்சம் வரை சிகிச்சை பெற முடியும் என்றார் பிரதமர் மோடி. மருத்துவ காப்பீடு திட்டம் குறித்து கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இது மெகா திட்டம் என்று குறிப்பிடப்படுகிறது.