பிரதமர் மோடியின் சமரச பேச்சு தோல்வி... 2 மத்திய அமைச்சர்கள் ராஜினாமா!
தெலுங்குதேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடுவுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடியுள்ளார்.
Recommended Video

டெல்லி: ஆந்திர மாநிலத்திற்கு தனி அந்தஸ்து தருவதில் மத்திய அரசு மறுப்பு தெரிவிப்பதால் கூட்டணியில் இருந்து வெளியேற முடிவு செய்த நிலையில் திடீர் திருப்பமாக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடியுள்ளார். எனினும் பிரதமரின் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது, தெலுங்குதேசம் கட்சியின் 2 அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
ஆந்திராவின் நீண்ட நாள் கோரிக்கையான சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கு தொடர்ந்து மத்திய அரசு காலதாமதம் செய்து வந்த நிலையில், 2014 தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்த தெலுங்கு தேசம் கட்சியின் நம்பிக்கையையும் மத்திய அரசு தவிடுபொடியாக்கியது.

ஆந்திராவிற்கு தனி அந்தஸ்து தர முடியாது என்று கூறியதால் அதிருப்தியடைந்த சந்திரபாபு நாயுடு மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் தெலுங்கு தேசம் கட்சியின் அமைச்சர்கள் இருவரை ராஜினாமா செய்ய வைக்க முடிவு செய்தார். ஆனால் இவர்களை முந்திக் கொண்டு சந்திரபாபு அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த பாஜக அமைச்சர்கள் இரண்டு பேர் இன்று தங்களது ராஜினாமா கடிதத்தை முதல்வரிடம் அளித்தனர்.
இதனால் எந்த நேரத்தில் வேண்டுமானால் தெலுங்குதேசம் கட்சி, பாஜக பிளவுபட்டதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிரதமர் நரேந்திர மோடி சந்திரபாபு நாயுடுவை தொலைபேசியில் அழைத்து பேசினார். எனினும் இந்த சமரச பேச்சுவார்த்தை தோல்வியில் தான் முடிந்துள்ளது.
ஏனெனில் தெலுங்கு தேசம் கட்சியின் இரண்டு அமைச்சர்கள் அசோக் கஜபதி ராஜூ மற்றும் ஒய்எஸ் சௌத்ரி இருவரும் பிரதமரை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளனர். தெலுங்கு தேசம் கட்சியின் கொடியுடன் பிரதமர் வீட்டிற்கு சென்ற அமைச்சர்கள் தங்களது ராஜினாமா கடிதத்தை மோடியிடம் அளித்துள்ளனர்.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications