ராஜ்யசபாவில் அமளி: துணை தூதர் கைதுக்கு எதிர்கட்சிகள் கண்டனம்

ராஜ்யசபாவில் பாஜக எம்.பி அருண் ஜேட்லி இந்த பிரச்சனையை எழுப்பி, இது குறித்து விவாதம் நடத்தி அமெரிக்காவிற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மத்திய அரசின் மெத்தனமான வெளியுறவுக் கொள்கையே இதற்கு காரணம் என்றும் அவர் குற்றம்சாட்டினார். இதன் பிறகாவது வெளியுறவுக் கொள்கையை மத்திய அரசு கடுமையாக்க வேண்டும் என்றும் அருண் ஜேட்லி கேட்டுக் கொண்டார்.
நட்புக் கரம் நீட்டும் நாடுகளுடன் மட்டும் உறவு வைத்துக் கொள்ளலாம் என்று கருத்து கூறிய ஜேட்லி, எந்த நாட்டினிடமும் சரணடைய தேவையில்லை என்று வலியுறுத்தினார்.
தி.மு.க., உறுப்பினர் கனிமொழி பேசுகையில், 'ஒரு இந்திய பெண்ணுக்கு ஏற்பட்ட அவதிமதிப்பை பொறுத்துக் கொள்ள முடியாது. இந்த சம்பவத்தின் மூலம், இந்திய வெளியுறவுக் கொள்கையை மறு ஆய்வு செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தியா, தனது கடுமையான எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும்,' என்றார்.
இந்த விவாதத்தில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கு பெற்றனர். இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்யும் என்று தொழில் வர்த்தக துறை அமைச்சர் ஆனந்த் சர்மா கூறினார். முன்னதாக மாநிலங்களவையில் பல்வேறு பிரச்சனைகளை எழுப்பி எதிர்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் 15 நிமிடங்களுக்கு அவை ஒத்திவைக்கப்பட்டது.
லோக்சபா ஒத்திவைப்பு
இதனிடையே மக்களவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. .குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 5 -ந்தேதி முதல் வரும் 20 -ந்தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று பல எதிர்ப்புகளையும் மீறி வலுவான லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டது.அதனை தொடர்ந்து அறிவிக்கப்பட்டதற்கு முன்பாகவே 2 நாட்களுக்கு முன்பாகவே குளிர்கால கூட்டத்தொடர் முடிந்து விட்டது.மக்களவை தேதி குறிப்பிடபடாமல் அவைத்தலைவர் மீரா குமார் ஒத்திவைத்துள்ளார்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications