தக்காளி, வெங்காயம், உருளை.. இதுவே எங்கள் முன்னுரிமை.. பெங்களூர் பொதுக்கூட்டத்தில் மோடி பேச்சு!
தனது அரசு காய்கறி மற்றும் பழங்கள் உற்பத்திக்கு முன்னுரிமை தரும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Recommended Video

பெங்களூரு: கர்நாடகாவில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் காய்கறி மற்றும் பழங்கள் உற்பத்திக்கு முன்னுரிமை தரப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட பட்ஜெட் அறிவிப்பின்படி ஆபரேஷன் பசுமைத் திட்டம் மூலம் காய்கறிகள் மற்றும் பழங்கள் உற்பத்திக்கு தனது அரசு முன்னுரிமை வழங்கம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு அம்மாநில பாஜக தலைவர் எடியூரப்பா பிரச்சார கூட்டங்களை நடத்தி வருகின்றார். இதில் அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

பாஜக ஆட்சிக்கு வந்தால்
இந்நிலையில் நேற்று கர்நாடகாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது கர்நாடகாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால், விவசாயிகள் நலன் பாதுகாக்கப்படும் என அவர் கூறினார்.

இதயத்தில் தாங்குகிறார்
விவசாயிகளை எடியூரப்பா இதயத்தில் தாங்குகிறார் என்றும் பிரதமர் மோடி கூறினார். விவசாயிகளுக்காக செயல்படுத்த எண்ணற்ற திட்டங்களை வைத்துள்ளோம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

ஆபரேஷன் கிரீன்
பழங்கள் மற்றும் காய்கறிகளை விளைவிக்கும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றார். அதாவது தக்காளி, வெங்காயம், உருளை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்காக ஆபரேஷன் க்ரீன் என்ற திட்டத்தை அமல்படுத்துவோம் என்றார்.

விவசாயிகளுக்கு பயன்
விவசாயிகளை மனதில் வைத்தே பட்ஜெட்டில் ஆபரேஷன் கிரீன் திட்டம் அறிவிக்கப்பட்டது என்றும் பிரதமர் மோடி கூறினார். பால்வளத்தை பெருக்குவதில் அமுல் திட்டம் எப்படி முன்மாதிரியாக இருந்ததோ அதேபோல் ஆபரேஷன் க்ரீன் திட்டம் பழம், காய்கறி விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும பிரதமர் மோடி கூறினார்.

சீர்திருத்தம், செயல்திறன், மாற்றம்
சீர்திருத்தம், செயல்திறன், மாற்றமே தங்களின் ஆட்சி மாதிரி என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். "எங்கள் அரசாங்கம் சீர்திருத்த கொள்கைகளை, செயல்படுத்துவதும், மாற்றுவது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மாற்றத்தை கொண்டு வருகிறோம்
நாங்கள் மிகச் சிறிய பிரச்சனைகளை தீர்க்க முயற்சி செய்கிறோம் என்றும் நிர்வாகத்தில், எங்கள் கொள்கைகள் மற்றும் எங்கள் வேலை மூலம், நாங்கள் மாற்றத்தை கொண்டு வருகிறோம், என்றும் பிரதமர் மோடி கூறினார்.

காங். அரசு விரட்டப்படும்
காங்கிரஸ் அரசு மாநிலத்தில் இருந்து விரட்டப்படும் என்றும் பிரதமர் மோடி கூறினார். 50 கோடி பேருக்கு 5 லட்சம் ரூபாய் மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருப்பதையும் மோடி சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டிற்கு பயனளிக்கும்
50 கோடி பேரின் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்ள மட்டும் இந்த திட்டம் அறிவிக்கப்படவில்லை. இது நோய்களை தடுக்க உதவும் என்றும் இது முழு நாட்டிற்கும் பயனளிக்கும் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
-
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்!












Click it and Unblock the Notifications